அவரது பிறந்த நாளிலே - குழந்தை பெற்றெடுத்த சீரியல் நடிகை காயத்ரி.

பிரபல சீரியல் நடிகையான காயத்ரி யுவராஜ் தம்பதிக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.
மானாட மயிலாட நடன நிகழ்ச்சி மூலமாக மக்கள் மத்தியில் அறிமுகமானவர் காயத்ரி. இவர் அதே நிகழ்ச்சியில் தன்னுடன் நடனமாடிய யுவராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதில் காயத்ரி நடனம் தவிர தென்றல், நிலா, சரவணன் மீனாட்சி, மெல்ல திறந்தது கதவு, தாமரை, மீனாட்சி பொண்ணுங்க என சன், விஜய், ஜீ என அனைத்து டிவியிலும் சீரியலில் ஒரு ரவுண்டு வந்தவர். இநத தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் கிட்டதட்ட 13ஆண்டுகள் கழித்து காய்த்ரி கர்பாமாக இருந்தார். இந்த நிலையில் இந்த அழகிய தம்பதிக்கு இன்று பெண்குழந்தை பிறந்துள்ளது.
இதனை யுவராஜ் தனது சமூகவலைதள பக்கம் மூலமாக தெரியப்படுத்தியுள்ளார். இதில் கூடுதல் ஸ்பெஷல் என்னவென்றால் இன்று காய்த்ரியின் பிறந்தநாளும் கூட, ஒரே நாளில் அம்மா, மகளின் பிறந்தநாள்.