செல்பி எடுக்க மறுத்ததால் சின்னத்திரை நடிகருக்கு வந்த சோதனை.. !
சென்னை பெசன்ட் நகர் கலா ஷேத்ரா காலனியில் வசிப்பவர் சதீஷ்குமார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரில் நடித்து பிரபலமானவர். கடந்த 2023 ஆம் ஆண்டு கலாஷேத்ரா காலனியில் உள்ள அறுபடை வீடு முருகன் கோயிலுக்கு சென்றுள்ளார். அப்போது 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உங்களுடன் செல்பி எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு சதீஷ்குமார் மறுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் யார் மூலமோ சதீஷ்குமாரின் செல்போன் எண்ணை வாங்கிய அந்த பெண் தினமும் போன் செய்து டார்ச்சர் செய்ததாக கூறப்படுகிறது..
இதையடுத்து சதீஷ்குமார் அந்த பெண்ணின் எண்ணை பிளாக் செய்துள்ளார்.சில மாதங்களாக எந்த தொந்தரவும் இல்லாத நிலையில் தற்போது அந்தப் பெண், தான் வசிக்கும் வீட்டை தெரிந்து கொண்டு, கடந்த சில தினங்களாக தனது வீட்டு வாசலில் குங்குமம் தடவிய எலுமிச்சம்பழத்தை வைத்து விட்டு, செய்வினை வைத்து உன்னை காலி செய்து விடுவேன் என மிரட்டி வருவதாக சதீஷ்குமார் திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் சதீஷ்குமாரின் வீடு அருகே உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து அந்த பெண் யார்? என கண்டுபிடிக்க முயற்சியில் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.