விஜய் 65-ல் இவரா ஹீரோயின் ? மகிழ்ச்சியில் பிரபல கன்னட நடிகை…#Thalapathy65
நடிகர் விஜய் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தில் பிரபல கன்னட நடிகை ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘கிரிக் பார்ட்டி’ என்ற கன்னடப் படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. கர்நாடகாவை சேர்ந்த இவர், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் நடித்து வந்தார். பிறகு தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த‘கீதா கோவிந்தம்’ படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘டியர் காம்ரேட்’ உள்ளிட்ட பல தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
தெலுங்கு படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது பாலிவுட் படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இதனிடையே கார்த்திக் நடித்து வெளிவர காத்திருக்கும் ‘சுல்தான்’ படத்தின் மூலம் தமிழில் ஏற்கனவே அறிமுகமாகியுள்ளார் ராஷ்மிகா மந்தனா.
தெலுங்கு, கன்னடம், இந்தி, தமிழ் என நான்கு மொழிகளில் பிஸியாக நடித்து வரும் ரஷ்மிகா மந்தனாவுக்கு நடிகர் விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை இருந்தது. இந்த விஷயத்தை சில நிகழ்ச்சிகளில் அவரே கூறியிருக்கிறார். இதனைத்தொடர்ந்து மாஸ்டர் படத்தில் நடிக்க முயற்சிகளை மேற்கொண்டார். இருப்பினும் அந்த அந்த வாய்ப்பு மாளவிகா மோகனனை சென்றடைந்தது.
இந்நிலையில் நெல்சன் இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார். அந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க வைக்க மூன்று நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கியாரா அத்வானி, பூஜா ஹேக்டே ஆகியோருடன் பேசி வருவதாக தகவல் வெளியானது. இதில் ராஷ்மிகா மந்தனா விஜய்யின் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.