ஒரு துண்டு சீட்டால் குஷ்பூவுக்கு நேர்ந்த சோகம்..!

ஒரு துண்டு சீட்டால் குஷ்பூவுக்கு நேர்ந்த சோகம்..!

கோடம்பாக்கத்தில் சின்னத்திரை சீரியல் என்றால் ராதிகாவும் ராடன் டிவியும் தான் என்று இருந்த நிலையில் தன்னுடைய சாமர்த்தியமான படைப்புகளால் அந்த இடத்துக்கு முன்னேறி வந்தவர் நடிகை குஷ்பூ. ஒரே நேரத்தில் ஐந்து சீரியல்களை எடுத்துக்கொண்டிருந்தார். அதில் மிகப்பெரிய ஹிட்டடித்த சீரியல் என்றால் அது ‘நந்தினி’ சீரியல்தான்! படங்களுக்கு இணையாக செலவு பண்ணி எடுக்கப்பட்ட சீரியல். அந்த சீரியல் முடிவுக்கு வந்த நிலையில் ‘நந்தினி-2’ எடுக்க பிரபல தொலைக்காட்சியோடு ஒப்பந்தம் போட்டு தேனிப்பக்கம் போய் கிட்டத்தட்ட முப்பது எபிஸோட் வரை எடுத்து முடித்துவிட்டார். விரைவில் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் என்ற நிலையில்தான் இந்த சோகம் நடந்திருக்கிறது!

ஒரு துண்டு சீட்டால் குஷ்பூவுக்கு நேர்ந்த சோகம்..!

குஷ்பூ காங்கிரசில் இருந்தவரை எந்தப்பிரச்சினையும் இல்லை. தி.மு.க கூட்டணி என்பதால் அந்தக் கட்சியைப் பற்றி விமர்சிக்க வேண்டிய வேலையே இல்லை. இப்போது பி.ஜெ.பி யில் இணைந்த பிறகு அப்படி இருக்க முடியுமா!? போகிற இடங்களிலெல்லாம் சகட்டு மேனிக்கு வெளுத்து வாங்க ஆரம்பித்திருக்கிறார். அதில் உச்சகட்டமாக ‘என் தாய் மொழி இந்திதான்… ஆனாலும் நான் எப்போதும் ‘துண்டு சீட்டில்’ எழுதி வைத்துக்கொண்டு பேசியதில்லை’ என்று பேசிய பேச்சால் அவரது சீரியல் கேரியரில் துண்டு விழுந்திருக்கிறது! அந்த சேனல் எப்போதும் அரசியல் வேறு, தொழில் வேறு என்று நினைக்கக் கூடியவர்கள்தான்… ஆனாலும் இந்தப் பேச்சு கொஞ்சம் ஓவர் என்று நினைத்தார்களோ என்னவோ எடுத்தவரை உள்ள எபிஸொட்டை வாங்கி வைத்துக்கொண்டு அதற்கு செலவான பணத்தைக் கொடுத்து செட்டில் பண்ணிட்டார்களாம்! இனி நந்தினி-2 வருமா என்பது சந்தேகம்தான்!

Share this story