திரையரங்குகளில் 100 சதவீத இருக்கை ரத்து… கூடுதல் காட்சி இயக்க அனுமதி

திரையரங்குகளில் 100 சதவீத இருக்கை ரத்து… கூடுதல் காட்சி இயக்க அனுமதி

மத்திய அரசு அறிவுரையை ஏற்று திரையரங்குகளில் 100 சதவீதம் இருக்கைக்கு அனுமதி அளித்த உத்தரவை தமிழக அரசு திரும்பப்பெற்றது.

கொரோனா காரணமாக சுமார் 9 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் கடந்த நவம்பர் மாதம் திறக்கப்பட்டு 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்கப்பட்டது. 

கடந்த இரண்டு மாதமாக இந்த உத்தரவு அமலில் இருந்த நிலையில் எந்த படமும் திரையிடாமல் இருந்து வந்தது. பின்பு திரைப்பரபலங்கள் விடுத்த கோரிக்கையடுத்து, 100 சதவீத இருக்கைகளையும் பயன்படுத்த அனுமதி வழங்கி தமிழக அரசு கடந்த 4-ம் தேதி உத்தரவிட்டது. திரையங்குகளில் 100 சதவிகித இருக்கை பயன்பாட்டிற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியதற்கு பொதுமக்கள், மருத்துவத்துறையினர், நீதிமன்றம் என பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.

திரையரங்குகளில் 100 சதவீத இருக்கை ரத்து… கூடுதல் காட்சி இயக்க அனுமதி

இந்நிலையில், 100 சதவிகித இருக்கைக்கு அனுமதி அளித்தது தொடர்பாக நேற்று மத்திய அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தது. இதனால் 100 சதவிகித இருக்கை அனுமதி தொடர்பாக பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு இன்று திரும்பப்பெற்றது. இதன் மூலம் மறு உத்தரவு வரும் வரை ஏற்கனவே நடைமுறையில் இருந்த 50 சதவிகித இருக்கை பயன்பாட்டிற்கு மட்டுமே தொடர்ந்து பின்பற்றப்பட உள்ளது. 

திரையரங்குகளில் 100 சதவீத இருக்கை ரத்து… கூடுதல் காட்சி இயக்க அனுமதி

50 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளபோதும் கூடுதல் காட்சிகளை திரையிட திரையரங்குகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Share this story