ஜூலை முதல் மீண்டும் திறக்கப்படும் தியேட்டர்கள்!?

ஜூலை முதல் மீண்டும் திறக்கப்படும் தியேட்டர்கள்!?

ஜூலை முதல் வாரம் முதல் தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பல துறைகளில் திரைத்துறை முக்கியமானது. திரைத்துறையை அடுத்து தியேட்டர்களும் முடங்கியுள்ளன. இதனால் திரைத்துறையில் பல மாற்றங்கள் உருவாகி வருகின்றன. ஓடிடி-யில் வரவுக்கு இது பெரும் வாய்ப்பாக அமைந்துவிட்டது.

கொரோனா முதல் அலையை அடுத்து தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்டன. மாஸ்டர், ஈஸ்வரன், கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி மக்களை மீண்டும் தியேட்டர்களை நோக்கி படையெடுக்கச் செய்தது.

ஜூலை முதல் மீண்டும் திறக்கப்படும் தியேட்டர்கள்!?

ஆனால் மீண்டும் இரண்டாவது அலை வந்து தியேட்டர்களை மீண்டும் முடக்கியது. தற்போது தியேட்டர்கள் மூடப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேல் ஆகி விட்டது.

தற்போது தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் கொரோனாவின் தீவிரம் குறைந்து வருகிறது. எனவே ஜூலை முதல் வாரம் முதல் தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. பாதிப்பு குறைவாக இருக்கும் பகுதிகளில் ஜூலை முதல் வாரத்திலும் ரெட் அலர்ட் உள்ள பகுதிகளில் ஜூலை இறுதியிலும் தியேட்டர்கள் திறக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

Share this story