கொரோனாவால் ஓடிடி பக்கம் வரும் த்ரிஷாவின் மற்றுமொரு படம்!

கொரோனாவால் ஓடிடி பக்கம் வரும் த்ரிஷாவின் மற்றுமொரு படம்!

த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘ராங்கி’ திரைப்படம் ஓடிடி-யில் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

த்ரிஷா தற்போது பெரும்பாலும் பெண் மையக் கதாபாத்திரங்கள் கொண்ட படங்களில் தான் நடித்து வருகிறார். சமீபத்தில் த்ரிஷா நடிப்பில் உருவாகியிருந்த ‘பரமபதம்’ திரைப்படம் ஹாட்ஸ்டாரில் வெளியானது.

தற்போது த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘ராங்கி’ என்ற படமும் ஓடிடி-யில் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. கொரோனா நெருக்கடி காரணமாகத் தான் இந்தப் படமும் ஓடிடி ரிலீஸைத் தேர்ந்தெடுத்திருக்கிறது என்று சினிமா வட்டாரங்கள் பேசிக் கொள்கின்றன.

கொரோனாவால் ஓடிடி பக்கம் வரும் த்ரிஷாவின் மற்றுமொரு படம்!

ஒரு வருடத்திற்கு முன்னரே இந்தப் படத்தின் டீசர் வெளியாகிவிட்டது. இந்தப் படத்தில் த்ரிஷா ஆக்ஷன் காட்சிகளிலும் களமிறங்கியுள்ளார் . மலையாள நடிகை அனஸ்வர ராஜன் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தை புகழ் சரவணன் இயக்கியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் படத்தைத் தயாரித்துள்ளனர். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இந்தப் படத்தின் கதை மற்றும் வசனங்களை எழுதியுள்ளார். சி சத்யா இசையமைத்துள்ளார்.

Share this story