‘வஞ்சத்தால் வீழ்ந்தேன்’ – கண்கலங்கிய நடிகர் வடிவேலு

‘வஞ்சத்தால் வீழ்ந்தேன்’ – கண்கலங்கிய நடிகர் வடிவேலு

திரைப்படங்கள் நடிக்க உடலில் தொம்பு இருந்தும் வாய்ப்பு இல்லை என காமெடி நடிகர் வடிவேலு உருக்கமாக தெரிவித்துள்ளார்.

‘வஞ்சத்தால் வீழ்ந்தேன்’ – கண்கலங்கிய நடிகர் வடிவேலு

தமிழ் திரையுலகில் ‘வைகைப் புயல்’ என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் காமெடி நடிகர் வடிவேலு. திரையுலகில் நகைச்சுவையில் ஒரு சாமராஜ்யத்தையே நடத்தி வந்தார். தமிழ் சினிமாவில் பல வித்தியாசமான கேரக்டரில் நடித்து ரசிகர் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்துள்ளார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தன்னுடைய நகைச்சுவையால் கட்டிப்போட்டவர்.

‘வஞ்சத்தால் வீழ்ந்தேன்’ – கண்கலங்கிய நடிகர் வடிவேலு

காமெடியில் கொடிக்கட்டி பறந்த வடிவேலு, இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் திரைப்படங்களில் நடிக்க, தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் வடிவேல் இருந்து வருகிறார். பின்னர் நடிப்பதற்கு எடுத்த முயற்சியும் வீண்போனது.

‘வஞ்சத்தால் வீழ்ந்தேன்’ – கண்கலங்கிய நடிகர் வடிவேலு
Vadivelu at Kaththi Sandai Trailer & HD Songs Launch

இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் வடிவேலு கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், கொரானாவால் நீங்க ஒரு வருடமாகதான் லாக்டவுன்ல இருக்கீங்க. ஆனா நான் பத்து வருஷமா லாக்டவுனிலேயே இருக்கிறேன் என உருக்கமாக பேசினார். உடல் அளவிலும், மனதளவிலும் தொம்ப இருந்தாலும், பட வாய்ப்பு வருவதில்லை என்று கூறினார். இதையடுத்து சிவாஜி நடித்த ‘கர்ணன்’ படத்தில் வரும் பாடலான ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ என்ற பாடலில் ‘வஞ்சத்தில் வீழ்ந்தேனடா’ என்ற வரியை பாடினார். இந்த பாடல் பாடும்போது குரல் தழுத்தழுத்து கண்கலங்கினார். இப்படிப்பட்ட கலைஞனுக்கு இந்த நிலைமையா என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

Share this story