திருமணக் கோலத்தில் நடிகை வேதிகா… அவரே சொன்ன உண்மை!

திருமணக் கோலத்தில் நடிகை வேதிகா… அவரே சொன்ன உண்மை!

நடிகை வேதிகாவுக்கு திருமணம் என்று பரவி வந்த செய்திகளுக்கு அவரே பதிலளித்துள்ளார்.

தற்போது திருமணக் கோலத்தில் ஒரு நடிகையின் போட்டோ வெளியானால் போதும் அது உண்மையா என்று கூட சரிபார்க்காமல் அவருக்குத் திருமணம் என்று புரளியைக் கிளப்ப ஆரம்பித்துவிடுகின்றனர். இது சமீப காலமாக அதிகமாக நடந்து வருகிறது. நடிகை அனுபமா ஒரு புகைப்படம் வெளியிட்டதை அடுத்து அவருக்கும் கிரிக்கெட் வீரர் பும்ராவுக்கும் திருமணம் என்று வதந்தியை பரப்பிவிட்டது குறிப்பிடத்தக்கது.

திருமணக் கோலத்தில் நடிகை வேதிகா… அவரே சொன்ன உண்மை!

தற்போது நடிகை வேதிகா மணப்பெண் கோலத்தில் விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். அந்தப் புகைப்படம் இணையத்தில் வெளியானதும் வழக்கம் போல அவருக்குத் திருமணம் என்று செய்தியை பரப்ப ஆரம்பித்துவிட்டனர்.

அதையடுத்து அந்தப் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ள வேதிகா, நீங்கள் நினைப்பது கட்டாயமாக இல்லை. என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் தான் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார்.

நடிகை வேதிகா 2006-ம் ஆண்டு அர்ஜுன் நடித்து இயக்கிய ‘மதராஸி’ படம் மூலம் திரைத்துறையில் நுழைந்தார். பின்னர் முனி, சக்கரகட்டி, பரதேசி, காவியத் தலைவன் மற்றும் காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்தார். பாலா இயக்கத்தில் நடித்த ‘பரதேசி’ படம் அவருக்கு பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது.

Share this story