‘மாநாடு’ விரைவில் மீண்டும் துவங்கும்… வெங்கட் பிரபு அறிவிப்பால் சிம்பு ரசிகர்கள் உற்சாகம்!

‘மாநாடு’ விரைவில் மீண்டும்  துவங்கும்… வெங்கட் பிரபு அறிவிப்பால் சிம்பு ரசிகர்கள் உற்சாகம்!

சிம்பு நடித்து வந்த மாநாடு படப்பிடிப்பு மீண்டும் விரைவில் துவங்கப்படும் என்று இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

சினிமாவிலிருந்து சிறிது காலம் விலகியிருந்த சிம்பு மீண்டும் ‘மாநாடு’ படம் மூலம் என்ட்ரி கொடுக்க இருப்பதாக அறிவித்தார். இதனால் சிம்பு ரசிகர்கள் உற்சாகமாகினர். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இப்படம் முற்றிலும் அரசியலை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. ஊரடங்கிற்கு முன்னர் ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட் அமைத்து மாநாடு படத்தின் முதல்கட்ட படப்பிடிப்புகள் நடந்தது. ஊரடங்கிற்குப் பின்னர் இந்தப் படவேலைகள் அப்படியே நின்றது.

‘மாநாடு’ விரைவில் மீண்டும்  துவங்கும்… வெங்கட் பிரபு அறிவிப்பால் சிம்பு ரசிகர்கள் உற்சாகம்!

இதற்கிடையில், மாநாடு படப்பிடிப்பு தொடங்க தாமதம் ஏற்படக்கூடும் என்பதால் சிம்பு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் குறுகிய காலத்தில் இரு கிராமத்துப் பின்னணி கொண்ட கதையை படமாக்க திட்டமிட்டார். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் சுற்று வட்டாரப் பகுதிகளில் மும்மரமாக நடந்து வருகிறது.

மாநாடு படம் பாதியில் நிற்க, சிம்பு மற்றொரு படத்தில் கமிட் ஆகியுள்ளதால் அப்படம் மீண்டும் உருவாகுமா? என்ற சந்தேகம் ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது. எனவே அந்தப் படம் குறித்த அப்டேட் கொடுக்குமாறு படக்குழுவினரிடம் சிம்பு ரசிகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

‘மாநாடு’ விரைவில் மீண்டும்  துவங்கும்… வெங்கட் பிரபு அறிவிப்பால் சிம்பு ரசிகர்கள் உற்சாகம்!

நேற்று சிம்பு அனைத்து சமூக வலைத்தளங்களிலும் அதிகாரபூர்வ கணக்குகள் தொடங்கினார். அதையடுத்து அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். சிம்புவை வாழ்த்திய வெங்கட் பிரபு “உங்களை மீண்டும் வரவேற்கிறேன் சிம்பு, மாநாடு விரைவில் மீண்டும் துவங்கும்” என்று தெரிவித்துள்ளார். இது சிம்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

மேலும் ஹைதெராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் அமைக்கப்பட்ட அதே பிரம்மாண்ட செட் தற்போது பாண்டிசேரியில் அமைக்கப்பட்டு வருகிறது. சுசீந்திரன் படத்தை சிம்பு முடித்ததும் விரைவில் மாநாடு படப்பிடிப்பில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story