கொரோனாவின் கோரத் தாண்டவம்… மற்றுமொரு நடிகர் பலி!

கொரோனாவின் கோரத் தாண்டவம்… மற்றுமொரு நடிகர் பலி!

மூத்த நடிகர் திலக் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

நடிகர் திலக் மேஜர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் 1981-ம் ஆண்டு வெளியான கல்தூண் படத்தின் மூலம் அறிமுகமானார்.

ஆறிலிருந்து அறுபது வரை, பேர் சொல்லா பிள்ளை, தாயில்லா குழந்தை என 70 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரங்களிலே தோன்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை 55 ஆண்டுகள் இவர் திரைத்துறையில் இருந்துள்ளார்.

ஏ.வி.எம் ஸ்டுடியோவில் உதவி தொகுப்பாளராகப் பணியாற்றிய இவர் 24 படங்களுக்கு மேல் உதவி தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ளார். தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர் இன்று உயிரிழந்துள்ளார்.

Share this story