திரைத்துறையில் மீண்டும் ஒரு இழப்பு… மூத்த நடிகர் மறைவு!

திரைத்துறையில் மீண்டும் ஒரு இழப்பு… மூத்த நடிகர் மறைவு!

மூத்த தமிழ் நடிகர் ஜோக்கர் துளசி இன்று காலமாகியுள்ளார்.

நடிகர் ஜோக்கர் துளசி 1990-ம் ஆண்டு ராம்கி மற்றும் சீதா ஆகியோர் நடிப்பில் வெளியான ‘மருது பாண்டி’ படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். பல ஆண்டுகளாக தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார் துளசி. மேலும் பல மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார்.

திரைத்துறையில் மீண்டும் ஒரு இழப்பு… மூத்த நடிகர் மறைவு!

வாணி ராணி, கோலங்கள், அழகு, கேளடி கண்மணி உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார். தமிழ் சினிமாவின் மூத்த நடிகராக வலம் வந்த ஜோக்கர் துளசி நேற்று உடல்நலக் குறைவால் காலமாகியுள்ளார்.

“ஜோக்கர் துளசி என்ற அற்புதமான மனிதர் காலமானதைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். பல தசாப்தங்களாக மேடை நாடகங்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ளார். நேர்மறையான எண்ணங்களுடன் தினமும் எனக்கு செய்திகளை அனுப்புவார். அவரின் குழந்தைத் தனமான பண்புகளை நினைவு கூர்கிறேன்” என்று நடிகை ராதிகா தெரிவித்துள்ளார்.

Share this story