மாஸ்டர் செல்ஃபி சம்பவம் ஓராண்டு நிறைவு… இந்திய அளவில் ட்ரெண்ட் செய்யும் விஜய் ரசிகர்கள்! #1YearOfMasterSelfie…

மாஸ்டர் செல்ஃபி சம்பவம் ஓராண்டு நிறைவு… இந்திய அளவில் ட்ரெண்ட் செய்யும் விஜய் ரசிகர்கள்! #1YearOfMasterSelfie…

நடிகர் விஜயின் நெய்வேலி செல்ஃபி சம்பவம் நிகழ்ந்து இன்றோடு ஒரு ஆண்டு நிறைவடைந்ததை அடுத்து #1YearOfMasterSelfie என்ற ஹாஷ்டாக்கை விஜய் ரசிகர்களை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

விஜய் நெய்வேலியில் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த போது, வருமான வரித்துறையினர் பிகில் பட சம்பள விவரம் தொடர்பாக விஜயை ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதையடுத்து மாஸ்டர் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பின்னர் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விஜய்க்கு ஆதரவாக நெய்வேலியில் குவிந்தனர்.

மாஸ்டர் செல்ஃபி சம்பவம் ஓராண்டு நிறைவு… இந்திய அளவில் ட்ரெண்ட் செய்யும் விஜய் ரசிகர்கள்! #1YearOfMasterSelfie…

பல ஊர்களில் இருந்தும் விஜயின் ரசிகர்கள் நெய்வேலி நோக்கி படையெடுத்தனர். நெய்வேலி லிக்னைட் கழகத்திற்கு முன்பு ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். பின்னர் தனது ரசிகர்களை சந்தித்த விஜய் அங்கிருந்த வேனின் மேல் ஏறி நின்றபடி ஆயிரக்கணக்காக ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். அந்தப் புகைப்படம் அப்போது சமூகவலைத்தளங்களில் மிகவும் வைரலானது.

மாஸ்டர் செல்ஃபி சம்பவம் ஓராண்டு நிறைவு… இந்திய அளவில் ட்ரெண்ட் செய்யும் விஜய் ரசிகர்கள்! #1YearOfMasterSelfie…

விஜய் தனது ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட அந்த செல்ஃபி 2020-ம் ஆண்டில் இந்திய அளவில் அதிக முறை ரீட்வீட் செய்யப்பட்ட புகைப்படம் என்ற சாதனையையும் படைத்தது.

தற்போது அந்த செல்ஃபி சம்பவம் நிகழ்ந்து ஒரு ஆண்டு நிறைவடைந்ததை அடுத்து விஜய் ரசிகர்கள் #1YearOfMasterSelfie என்ற ஹாஷ்டாக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

விஜய் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார். அதையடுத்து இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Share this story