விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’ படத்திலிருந்து விலகக் காரணம் என்ன!? நடிகை அதிதி ராவ் விளக்கம்!

விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’ படத்திலிருந்து விலகக் காரணம் என்ன!? நடிகை அதிதி ராவ் விளக்கம்!

அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி துக்ளக் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் இந்தப் படத்தை தயாரிக்கின்றனர்.

முதலில் நடிகை அதிதி ராவ் ஹைதரி தான் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் அவர் இப்படத்திலிருந்து விலகியதாகத் தெரிவிக்கப்பட்டது. அதிதிக்குப் பதிலாக இந்தப் படத்தில் நடிகை ராஷி கண்ணா நடிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தற்போது நடிகை அதிதி ராவ் படத்திலிருந்து விலகிய காரணம் குறித்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்

“கொரோனா வைரஸ் தொற்றுநோயால், இந்தியத் திரைத்துறை உட்பட உலகம் இந்த ஆண்டு 6-8 மாதங்களுக்கு மேல் ஸ்தம்பித்தது. வேலைகள் மெதுவாக ஒவ்வொரு படியாக ஆரம்பிக்கப்பட்டு, திரையுலகம் மீண்டும் தன் நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தாமதமான படங்களில் நடிப்பது குறித்து யோசித்து வருகிறேன். ஒரு நடிகராக, யாரையும் காத்திருக்காமல் இருக்க வேண்டிய பொறுப்பை நான் உணர்கிறேன். நான் ஏற்கனவே நடித்து பாதியில் நிறுத்தப்பட்ட படங்களை முதலில் முடிக்க நான் கடமைப்பட்டுள்ளேன், நான் இன்னும் தொடங்காத திட்டங்களில் எந்த தாமதத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை, எவ்வளவு வேலை செய்ய விரும்புகிறேன்.

தற்போதைய சூழ்நிலையை மனதில் கொண்டு, நான் தயாரிப்பாளருடன் லலித் குமார் மற்றும் இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாள் ஆகியோருடன் கலந்தாலோசித்து இந்தப் படத்திலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளேன். இயக்குனர், டெல்லி பிரசாத், விஜய் சேதுபதி மற்றும் துக்ளக் தர்பாரின் ஒட்டுமொத்த குழுவினருக்கும் மிகச் சிறந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’ படத்திலிருந்து விலகக் காரணம் என்ன!? நடிகை அதிதி ராவ் விளக்கம்!

ராஷி கண்ணா உங்களிடம் விட்டுச் செல்கிறேன்! இந்த படத்தை நீங்கள் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்! நான் சத்தியம் செய்கிறேன், உங்கள் அனைவரையும் மிக விரைவில் தியேட்டரில் பார்ப்பேன். அதுவரை, பாதுகாப்பாக இருங்கள், கவனித்துக் கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Share this story