அஜித்தை காப்பி அடித்த சிம்பு ரசிகர்கள்

அஜித்தை காப்பி அடித்த சிம்பு ரசிகர்கள்

அஜித் ரசிகர்களை தொடர்ந்து சிம்பு ரசிகர்களுக்கும் நடு கடலில் சிம்புவுக்கு பேனர் வைத்துள்ளனர்

சென்னை: அஜித் ரசிகர்களை தொடர்ந்து சிம்பு ரசிகர்களுக்கும் நடு கடலில் சிம்புவுக்கு பேனர் வைத்துள்ளனர்.

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படம் வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் நடிகர் சிம்பு தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில்,’ வந்தா ராஜாவாதான் வருவேன் படம் வெளியாகும் அன்று பால் அபிஷேகம், பெரிய கட் அவுட், பேனர் எல்லாம் வேண்டாம். அதற்கு பதிலாக உங்களுடைய அம்மாவுக்கு புடவை, அப்பாவுக்கு சட்டை, சகோதர சகோதரிகளுக்கு முடிந்ததை செய்யுங்கள் எனத் தெரிவித்திருந்தார். ஆனால்  இது குறித்து நெட்டிசன்கள், உங்களுக்கு தான் ரசிகர்களே இல்லையே என்று  கிண்டல் செய்யக் கடுப்பான சிம்பு மீண்டும் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார்.

அதில், ‘இதுவரைக்கும் நீங்க வைக்காத அளவுக்கு பிளெக்ஸ், கட் அவுட் வைக்கிறீங்க. பால் எல்லாம் பாக்கெட்டில் பத்தாது, அண்டாவில் கொண்டு வந்து ஊற்ற வேண்டும். வேற லெவலில் செய்றீங்க. இதுதான் நான் உங்களிடம் எதிர்பார்க்கிறேன்’ என்று கூறியிருந்தார். இதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழி லாளர்கள் நலச் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்ததோடு  காவல் ஆணையர் அலுவலகத்திலும், புகார் அளித்தனர்.

இந்நிலையில், சிம்பு ரசிகர்கள் தற்போது விஸ்வாசம் படம் பாணியில் சிம்புவிற்கு பாண்டிச்சேரி நடுக்கடலில்  கடவுட் வைத்துள்ளனர்.படம் வரும் முன்பே சிம்பு ரசிகர்கள் பேனர், கட் அவுட்டுக்களை வைக்க ஆரம்பித்துவிட்டனர். இதே ரீதியில் சென்றால் படம் வெளியாகும் தினத்தில் சிம்பு ரசிகர்கள் படத்திற்கு அளிக்க போகும் வரவேற்பு பிரமாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story