‘அண்ணாத்த’ படக்குழுவுக்கு புதிய உத்தரவு… வேகமெடுக்கும் படத்தின் ஷூட்டிங்….

‘அண்ணாத்த’ படக்குழுவுக்கு புதிய உத்தரவு… வேகமெடுக்கும் படத்தின் ஷூட்டிங்….

‘அண்ணாத்த’ படத்தின் ஷூட்டிங்கை விரைவில் முடிக்க சில அறிவுரைகளை படத்தயாரிப்பு நிறுவனம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘அண்ணாத்த’ படக்குழுவுக்கு புதிய உத்தரவு… வேகமெடுக்கும் படத்தின் ஷூட்டிங்….

 ‘அண்ணாத்த’  திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. சிறுத்தை சிவா இயக்கும் இந்த படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வரும் நவம்பர் 4ம் தேதி தீபாவளியையொட்டி இந்த படம் ரிலீசாகும் என ஏற்கனவே படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார்.

‘அண்ணாத்த’ படக்குழுவுக்கு புதிய உத்தரவு… வேகமெடுக்கும் படத்தின் ஷூட்டிங்….

இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். சென்னையில் நடைபெற்று வந்த இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த ஏப்ரல் 9ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெறும் இந்த ஷூட்டிங்கில் ரஜினி நடிக்கவேண்டிய முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. விரைவில் இறுதிக்கட்ட ஷூட்டிங்கை முடிக்க இரவு பகலாக படக்குழு பணியாற்றி வருகிறது.

‘அண்ணாத்த’ படக்குழுவுக்கு புதிய உத்தரவு… வேகமெடுக்கும் படத்தின் ஷூட்டிங்….

இதையடுத்து இரவு நேர ஊரடங்கு தெலுங்கானாவில் போடப்பட்டுள்ளதால் படப்பிடிப்பை இரவு நேரங்களில் நடத்த முடியவில்லை. இதனால் பகல் நேரத்தில் மட்டும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் படக்குழுவினருக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி கொரானா அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால் விரைவில் லாக்டவுன் வந்துவிடும் பரவலாக பேசப்படுகிறது. இதனால் ‘அண்ணாத்த’ படத்தை கண்டிப்பாக மூன்று வாரங்களில் முடித்துவிட வேண்டும். இல்லையென்றால் மீண்டும் படத்தின் ஷூட்டிங் நடத்துவது கடினமாகிவிடும் என்று கூறியுள்ளது. இதனால் படப்பிடிப்பின் வேகத்தை இருமடங்காக்கி பணியாற்றி வருகின்றனர் படக்குழுவினர்.

Share this story