இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனாக மாறிய மாதவன்!

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனாக மாறிய மாதவன்!

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்று படத்துக்காக நடிகர் மாதவன் தனது லுக்கை மாற்றியுள்ளார்.

சென்னை: இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்று படத்துக்காக நடிகர் மாதவன் தனது லுக்கை மாற்றியுள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன், 1990-களில் ராக்கெட் தொழில்நுட்பம் குறித்த ரகசியங்களை பணம் பெற்றுக் கொண்டு வெளிநாடுகளுக்கு விற்றதாக குற்றம் சாட்டப்பட்டு, சிறை வாசம் அனுபவவித்தார். பொய்யான குற்றச்சாட்டினால் தண்டிக்கப்பட்ட நம்பி, சமீபத்தில் நிரபராதி என விடுவிக்கப்பட்டார்.

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனாக மாறிய மாதவன்!

இவரது வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகும் ‘ராக்கெட்ரி-நம்பி விளைவு’ என்ற படத்தில் நம்பி நாராயணனாக மாதவன் நடிக்கிறார். இது தொடர்பான அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசரும் வெளியானது. இப்படம் தமிழ்,ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் உருவாகி வருகிறது.

இப்படத்திற்காக நடிகர் மாதவன் தனது தோற்றத்தை நம்பி நாராயணன் போன்று மாற்றியுள்ளார். அதன் புகைப்படங்களை மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த படத்தை ஆனந்த் மகாதேவன் என்பவருடன் இணைந்து நடிகர் மாதவனும் இயக்கி வருகிறார். விரைவில் இப்படம் குறித்த கூடுதல் தகவல் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Share this story

News Hub