குழந்தைகள் தினத்தை கொண்டாட நடிகர் சூரி செய்த காரியம்! வைரல் வீடியோ!
1573700287000
இதனால் பள்ளிகளில் கொண்டாட்டம், சாக்லேட் என இன்று குழந்தைகள் உற்சாகத்துடன் காணப்படுவர்
இந்தியாவின் முதல் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான (நவம்பர் 14 ) இன்று குழந்தைகள் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனால் பள்ளிகளில் கொண்டாட்டம், சாக்லேட் என இன்று குழந்தைகள் உற்சாகத்துடன் காணப்படுவர்.
இந்நிலையில் நடிகர் சூரி தனது தனது அலுவலகம் அமைந்துள்ள சாலிகிராமம் பகுதியில் உள்ள பத்மா சாரங்கபாணி பள்ளிக்கு சென்றுள்ளார்.
அங்கிருந்த பள்ளி குழந்தைகளை நேரில் சந்தித்துக் கைகுலுக்கி சர்ப்ரைஸ் செய்த சூரி அதை வீடியோவாக எடுத்து தனது டிவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.
நடிகர் சூரிக்கு குழந்தைகள் மட்டுமில்லாது ஆசிரியர்களும் பெற்றோர்களும் கைகொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.