கோடிக்கணக்கில் விலை போன திருமண புகைப்படம்: ஆச்சர்யமூட்டும் பிரியங்கா!

கோடிக்கணக்கில் விலை போன திருமண புகைப்படம்: ஆச்சர்யமூட்டும் பிரியங்கா!

திருமணத்துக்கு முன்பே பிரியங்கா சோப்ராவின் திருமண புகைப்படத்தின் சர்வதேச உரிமை பல கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.

மும்பை: திருமணத்திற்கு முன்பே பிரியங்கா சோப்ராவின் திருமண புகைப்படத்தின் சர்வதேச உரிமை பல கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.

முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான பிரியங்கா சோப்ரா, பிரபல அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனஸை காதல் திருமணம் செய்யவிருக்கிறார். தன்னைவிட 10 வயது குறைந்த காதலரை வரும் டிசம்பர் 2ம் தேதி ஜோத்பூரில் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள கலைநயமிக்க ’மெஹ்ரான்கர்’ கோட்டையில் உலக புகழ் மிக்க ஜோடிகளுக்கு டெஸ்டினேஷன் வெட்டிங் நடைபெறவுள்ளது. இந்த திருமணத்திற்கு இந்திய திரையுலக பிரபலங்கள் மட்டுமின்றி உலக நட்சத்திரங்களும் பங்கேற்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கோடிக்கணக்கில் விலை போன திருமண புகைப்படம்: ஆச்சர்யமூட்டும் பிரியங்கா!

சமீபத்தில் பேச்சுலர் பார்ட்டியை முடித்த பிரியங்கா-நிக் ஜோடியின் திருமண வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கிறிஸ்துவ மற்றும் இந்து முறைப்படி இவர்களது திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், உலகளவில் பிரபலமான நிறுவனம் ஒன்று பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் திருமண புகைப்படங்களின் சர்வதேச உரிமத்தை பெரும் தொகைக்கு கைப்பற்றியுள்ளது. சுமார் 2.5 மில்லியன் டாலருக்கு இவர்களது திருமண புகைப்படத்துக்கான உரிமம் விற்பனையாகியுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.18.25 கோடி ஆகும்.

திருமண புகைப்படத்தின் உரிமமே இத்தனை கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

Share this story