சிங்கப்பூரில் ஜொலிக்கும் நடிகை ஸ்ரீதேவியின் மெழுகுசிலை!

சிங்கப்பூரில் ஜொலிக்கும் நடிகை ஸ்ரீதேவியின் மெழுகுசிலை!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் சிலை, சிங்கப்பூரில் உள்ள Madame Tussauds மெழுகுக் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் சிலை, சிங்கப்பூரில் உள்ள Madame Tussauds மெழுகுக் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளது. 

இன்று தொடங்கிய அந்த மெழுகு கண்காட்சியில், அவரது கணவர் போனி கபூருடன், மகள்கள் இருவரும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய போனி கபூர், “ஸ்ரீதேவிக்கு மிகவும் பிடித்த சுற்றுலாத் தலங்களில் சிங்கப்பூரும் ஒன்று. ஸ்ரீதேவியின் ஆரம்ப காலப் படங்கள் சிங்கப்பூரில் படமாக்கப்பட்டதால், சிங்கப்பூரிலுள்ள இடங்கள் அவருக்கு அதிகம் தெரியும். என் மனைவியின் சிலையை இத்தனை நுட்பமாக உருவாக்கியுள்ள Madame Tussauds கலைஞர்களுக்கு மனமார்ந்த நன்றி” என்றும் தெரிவித்தார். 

முதல் முறையாக முப்பரிமாணத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிலையின் ஆடை, கீரிடம் காதணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூரில் உள்ள Madame Tussauds மறைந்த பிரபலம் ஒருவரின் சிலையை உருவாக்கியிருப்பது இதுவே முதல் முறையாகும். 

Share this story