சென்ஸார் தடைகளைத் தாண்டி அடுத்த வாரம் வெளிவருகிறது ட்ரான்ஸ்!

சென்ஸார் தடைகளைத் தாண்டி அடுத்த வாரம் வெளிவருகிறது ட்ரான்ஸ்!

பிரிதிவிராஜுடன்’ கூடே’ என்கிற மலையாளப்படத்தில் ஆவியாக நடித்த நஸ்ரியாவுக்கு ‘ட்ரான்ஸ்’ இரண்டாவது இன்னிங்ஸில் இரண்டாவது படம். உஸ்தாத் ஓட்டலுக்குப் பிறகு ஏழு வருடங்கள் கழித்து அன்வர் ரஷீத் இயக்கும் படம் இது.இதில் ஃபகத் ஃபாசில் மோட்டிவேஷனல் ஸ்பீக்கராக வருகிறார்.

நிறம்,ராஜா ராணி,வாயைமூடிப் பேசவும் படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் உள்ளம் கவர்ந்தவர் நஸ்ரியா. அவர் பிரபல நடிகர் ஃபகத் ஃபாசிலை திருமணம் செய்து கொண்டு போன போது தமிழ் மலையாள சினிமா ரசிகர்கள் மனசொடிந்து போனார்கள்.சில வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.

சென்ஸார் தடைகளைத் தாண்டி அடுத்த வாரம் வெளிவருகிறது ட்ரான்ஸ்!

பிரிதிவிராஜுடன்’ கூடே’ என்கிற மலையாளப்படத்தில் ஆவியாக நடித்த நஸ்ரியாவுக்கு ‘ட்ரான்ஸ்’ இரண்டாவது இன்னிங்ஸில் இரண்டாவது படம். உஸ்தாத் ஓட்டலுக்குப் பிறகு ஏழு வருடங்கள் கழித்து அன்வர் ரஷீத் இயக்கும் படம் இது.இதில் ஃபகத் ஃபாசில் மோட்டிவேஷனல் ஸ்பீக்கராக வருகிறார்.கார்பரேட் கம்பெனி ஊழியர்களுக்கு ஊக்கம் தந்து பேசுவது அவரது தொழில்.இதில் நஸ்ரியா ஒரு கார்பரேட் கம்பெனி ஊழியராக வருகிறார். இவர்களோடு பிரபல இயக்குநர் கெளதம் மேனனும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

சென்ஸார் தடைகளைத் தாண்டி அடுத்த வாரம் வெளிவருகிறது ட்ரான்ஸ்!

காதலர் தினத்தன்று ரிலீஸ் செய்ய இருந்த படம் சென்சார் பிரட்சினையால் தாமதமாகி விட்டது.திருவனந்தபுரம் சென்சார் போர்டு படத்தின் ஆரம்பத்தில் வரும் 17/நிமிட நீளம் கொண்ட பகுதியை நீக்கச் சொன்னது.இயக்குநர் அன்வர் ரஷீது அதை ஒப்புக்கொள்ளாமல் மும்பை ரிவைசிங் கமிட்டிக்கு போனார்.ஒரு இடத்தில் கூட கத்தரி போடாமல்,யு.ஏ சர்டிஃபிகேட் கிடைத்து விட்டது.ஃபிப்ரவரி 20 ம் தேதி திரைக்கு வருகிறது. கேரள சினிமா ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது.

சென்ஸார் தடைகளைத் தாண்டி அடுத்த வாரம் வெளிவருகிறது ட்ரான்ஸ்!

 

Share this story