"தர்ஷனை எதுக்கு டார்ச்சர் பண்ணுற; நல்ல ஹாஸ்பிடலுக்கு போய் பாரு" சனம் ஷெட்டியை திட்டிய பிக் பாஸ் அபிராமி

"தர்ஷனை எதுக்கு டார்ச்சர் பண்ணுற; நல்ல ஹாஸ்பிடலுக்கு போய் பாரு" சனம் ஷெட்டியை திட்டிய பிக் பாஸ் அபிராமி

நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி சென்னை கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹாவிடம் நேரடியாக புகார் அளித்தார்.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர்  தர்ஷன். இவர் மீது  மாடல் அழகியும்  தர்ஷனின் காதலியுமான  சனம் ஷெட்டி  நிச்சயதார்த்தம் முடிந்த பின்பு திருமணத்தை நிறுத்தியது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி  சென்னை கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹாவிடம் நேரடியாக புகார் அளித்தார். 

 

ttn

 சனம் ஷெட்டி கொடுத்த புகாருக்கு தர்ஷன்நேற்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அதில், ‘என்னை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தியது அவர்தான். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட என்னுடன் பழகிய சில பெண்களிடம் அவர் நேரடியாக சென்று மிரட்டி இருக்கிறார். நான் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்த சமயத்தில் ரம்யா சத்ய திருமணத்திற்கு அவருடைய முன்னாள் காதலனுடன் தனியறையிலிருந்திருக்கிறார். அதற்கான ஆதாரம் மற்றும் இன்னும் அவரைப்பற்றிய பல ஆதாரங்கள் என்னிடம் உள்ளது’ என்று கூறி பரபரப்பை கிளப்பினார்.

 

ttn

இந்நிலையில் சனம் ஷெட்டி இந்த விவகாரம் குறித்து பிரபல ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், தர்ஷன் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகு அவர் நடவடிக்கைளில் நிறைய மாற்றங்கள் இருந்தன. அவர் என்னை சந்திக்கவே இல்லை. நானே தான் அவர் தங்கியிருந்த உறவினர் வீட்டுக்கு சென்று அவரை பார்த்தேன். அப்போது கூட அவர் என்னிடம் சரியாக பேசவில்லை. அதன் பிறகு எங்களுக்குள் சின்னசின்ன சண்டைகள் வந்தது. ஒருமுறை நான் நிகழ்ச்சிக்காக மலேசியா சென்றிருந்தேன். அதே நிகழ்ச்சிக்கு செல்ல விமானத்தில் தர்ஷனும் அபிராமியும் வந்திருந்தனர். அப்போது அபிராமியும் தர்ஷனும் பேசிக்கொண்டிருந்தனர். 

"தர்ஷனை எதுக்கு டார்ச்சர் பண்ணுற; நல்ல ஹாஸ்பிடலுக்கு போய் பாரு" சனம் ஷெட்டியை திட்டிய பிக் பாஸ் அபிராமி

அப்போது தர்ஷனிடம் நான் பேச முயன்றபோது என்னை அபிராமி விடவே இல்லை. அவனை ஏன் டார்ச்சர் செய்கிறாய் என்று கோபமாக கேட்டார். அதற்கு நான் நீ எனக்கு நல்ல பிரெண்டுன்னு  நினைத்தேன்.நீ எனக்கு உதவி பண்ணவில்லை என்றாலும் பரவாயில்லை என்று கூறினேன். அதற்கு   அபிராமி உனக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. போய்  மனநல மருத்துவரை பார் என்று கூறினார். அந்த  வார்த்தை என்னை மிகவும் காயப்படுத்திவிட்டது. ஆனால்  உண்மை என்ன என்பது அவளுக்கு தெரியும்’ என்றார். 

 

Share this story