நயன்தாராவுக்காக மன்னிப்பு கேட்ட சிவகார்த்திகேயன்: காரணம் தெரியுமா?

நயன்தாராவுக்காக மன்னிப்பு கேட்ட சிவகார்த்திகேயன்: காரணம் தெரியுமா?

நடிகர் சிவகார்த்திகேயன் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தில் நயன்தாராவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் காட்சிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிக்கும் புதிய படத்தில் நயன்தாராவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் காட்சிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயனும், நயன்தாராவும் ஜோடியாக நடிக்கிறார்கள். அந்தப்படத்தின் ஷூட்டிங் தற்போது நிறுத்தப்பட்டிருக்கிறது. நயன்தாரா கால்ஷீட் இல்லாததால் சிவகார்த்தி வேறு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது. 

இந்தப் படத்தின் ஒவ்வொரு சீனிலும் நயன்தாராவின் பங்களிப்பு அதிகம் இருக்கவேண்டும் என சிவகார்த்திகேயன்  விரும்புவதாகவும், வேலைக்காரன் திரைப்படத்தில் நயன்தாராவின் காட்சிகள் பல வெட்டப்பட்டு சிவகார்த்தியின் காட்சிகளை அதிகப்படுத்தியதால் நயன்தாராவுக்கு இந்தப்படத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என சிவகார்த்தி முடிவெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நயன்தாராவுக்காக மன்னிப்பு கேட்ட சிவகார்த்திகேயன்: காரணம் தெரியுமா?

இந்தப்படம் ரஜினியின் ‘மன்னன்’ படத்தின் சாயலில் படமாக்கப்படுகிறது. மன்னன் படத்தில் ரஜினியை, விஜயசாந்தி அம்மா செண்டிமெண்டில் கார்னர் செய்வதுபோல, நயன்தாராவும் சிவகார்த்திகேயன் வேலை செய்யும் நிறுவனத்தை விலைக்கு வாங்கி பழி வாங்குகிறார்.  நயன்தாரா சிவகார்த்தியை பழிவாங்கிய வெற்றியில் கொக்கரிப்பதும், அவரிடம் சிவகார்த்திகேயன் மன்னிப்பு கேட்பதும் போல  காட்சி படமாக்கப்பட்டுள்ளது. நயன்தாராவுக்காக மன்னிப்பு கேட்கும் காட்சி வைக்கப்பட்டதாக   கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Share this story