பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா திருமணத்தில் பிரதமர் மோடி?: உண்மை நிலவரம் என்ன?

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா திருமணத்தில் பிரதமர் மோடி?: உண்மை நிலவரம் என்ன?

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா- நிக்ஜோன்ஸ் திருமண நிகழ்வில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மும்பை: பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா- நிக் ஜோன்ஸ் திருமண நிகழ்வில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான பிரியங்கா சோப்ரா, பிரபல அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனஸை காதல் திருமணம் செய்யவிருக்கிறார். தன்னைவிட 10 வயது குறைந்த காதலரை வரும் டிசம்பர் 2ம் தேதி ஜோத்பூரில் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார். 29ம் தேதி தொடங்கும் இந்த நிகழ்வு மெஹந்தி நிகழ்வு, சங்கீத கச்சேரி என ஐந்து நாட்கள் தொடர உள்ளது. இவர்களது திருமண நிகழ்வு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள கலைநயமிக்க ’மெஹ்ரான்கர்’ கோட்டையில் நடைபெறவுள்ளது. இந்தத் திருமணத்திற்கு இந்திய திரையுலக பிரபலங்கள் மட்டுமின்றி உலக நட்சத்திரங்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

priyanka

இந்நிலையில் இந்தத் திருமணத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியை சிறப்பு விருந்தினராகப் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.  கடந்த வியாழக்கிழமை இந்தியா திரும்பிய நிக்ஜோன்ஸும், பிரியங்கா சோப்ராவும் டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகம் சென்று தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. முன்னதாக கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி- அனுஷ்கா ஷர்மா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மோடி கலந்து கொண்டு இன்ப அதிர்ச்சி அளித்தார். அதேபோல் பிரியங்கா சோப்ரா திருமணத்திலும் அவர் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Share this story