மீண்டும் சர்ச்சையை கிளப்பும் நடிகை ஸ்ரீதேவி மரணம்: ஆவேசமான போனி கபூர்

மீண்டும் சர்ச்சையை கிளப்பும் நடிகை ஸ்ரீதேவி மரணம்: ஆவேசமான போனி கபூர்

ஒருவர் காலைப்பிடிக்க மற்றொருவர் தலையில் தண்ணீரில் மூழ்கடித்தால் மட்டுமே ஒருவர் உயிரிழக்க முடியும்

மும்பை:  நடிகை ஸ்ரீதேவி கொல்லப்பட்டாரா என்ற கேள்விக்கு அவரது கணவர் போனிகபூர் ஆவேசமாகப் பதிலளித்துள்ளார். 

நடிகை  ஸ்ரீதேவி உறவினர் திருமணத்திற்காகத் துபாய் சென்ற நிலையில் 2018ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி குளியல் தொட்டியில் தவறி விழுந்து  உயிரிழந்தார். அவரது இறப்பு குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டது. 

மீண்டும் சர்ச்சையை கிளப்பும் நடிகை ஸ்ரீதேவி மரணம்: ஆவேசமான போனி கபூர்

ரீதேவி உயிரிழந்து ஒரு வருடம் கடந்துவிட்ட நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீதேவி  இறப்பு குறித்து  கேரள டிஜிபி ரிஷிராஜ் சிங் கேரளகவ்முதி நாளிதழுக்குப் பேட்டியளித்துள்ளார். அதில், ‘ ஸ்ரீதேவி நிச்சயம் கொலை செய்யப்பட்டிருக்கவே வாய்ப்பிருப்பதாக தன் நண்பனான தடயவியல் நிபுணர் டாக்டர் உமாநாதன் தன்னிடம் தெரிவித்தார். ஒருவர் எவ்வளவு போதையிலிருந்தாலும், ஒரு அடி தண்ணீரில் மூழ்க வாய்ப்பில்லை. ஒருவர் காலைப்பிடிக்க மற்றொருவர் தலையில் தண்ணீரில் மூழ்கடித்தால் மட்டுமே ஒருவர் உயிரிழக்க முடியும் என்று என்னிடம் கூறினார். ஆனால் உமாநாதன் தற்போது உயிருடன் இல்லை’ என்றார்.  கேரள டிஜிபியின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து  ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் பேசும்போது, ‘இதுபோன்ற முட்டாள் தனமான விஷயங்களுக்கு நான் பதில் கூற விருப்பவில்லை. இது போன்ற விஷயங்கள் தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கிறது. இது அவர்களின் தனிப்பட்ட கற்பனை’ என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

Share this story