முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்ட நடிகர் அசோக் செல்வன்

முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்ட நடிகர் அசோக் செல்வன்

கொரானாவிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் வகையில் நடிகர் அசோக் செல்வன் முதல் டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.

முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்ட நடிகர் அசோக் செல்வன்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. அதனால் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது. கடந்த மாதம் வரை 45 வயதுக்கும் மேற்பட்டோருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. ஆனால் மே 1ம் தேதியிலிருந்து 18 வயதிலிருந்தே தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதேசமயம் தடுப்பூசி தட்டுப்பாடு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்ட நடிகர் அசோக் செல்வன்

இதற்கிடையே சினிமா துறையை சார்ந்த பலரும் கொரானாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் கொரானாவிலிருந்து பாதுகாப்பாக இருக்க பல முக்கிய நட்சத்திரங்கள் ஒவ்வொருவராக தடுப்பூசி போட்டு வருகின்றனர். ஏற்கனவே நடிகர்கள் கௌதம் கார்த்திக், ஜீவா, சூரி, ஹரி கல்யாண், நடிகைகள் நயன்தாரா, சாக்ஷி அகர்வால், ரம்யா பாண்டியன் உள்ளிட்டோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்ட நடிகர் அசோக் செல்வன்

இந்நிலையில் இளம் நடிகராக வலம் அசோக் செல்வன் நேற்று தனது முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். அந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Share this story