கொரானா தடுப்பூசி போட்டுக் கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ்

கொரானா தடுப்பூசி போட்டுக் கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் ‌இன்று தனது முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.

கொரானாவின் 2வது அலையின் தீவிரத்தால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர். தமிழகத்தில் கொரானா தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 450-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி தடுப்பூசி போட்டு வருகின்றனர். தடுப்பூசி போடுவதை ஊக்கப்படுத்த பல்வேறு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது.

கொரானா தடுப்பூசி போட்டுக் கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ்

ஏற்கனவே சினிமா நட்சத்திரங்கள், முக்கிய பிரபலங்கள், அரசியல்வாதிகள் என பலரும் தடுப்பூசி போட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் ரஜினி, நயன்தாரா,காஜல் அகர்வால் உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்களும் தடுப்பூசி போட்டு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று தனது முதல் டோஸ் கொரானா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ளார்.

Share this story