‘இதுவே நீங்கள் தரும் பரிசு’ – பிறந்தநாளில் நடிகர் கார்த்தி வேண்டுகோள்

‘இதுவே நீங்கள் தரும் பரிசு’ – பிறந்தநாளில் நடிகர் கார்த்தி வேண்டுகோள்

கொரானா நேரத்தில் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என நடிகர் கார்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரானா இரண்டாவது அலை தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனால் தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாள் ஒன்றிற்கு 30 ஆயிரத்திற்கும் மேல் உயர்ந்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் தொற்று பாதிப்பால் 402 வரை உயிரிழந்துள்ளனர். இதனால் ஒரு வார முழு ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது தமிழக அரசு.

‘இதுவே நீங்கள் தரும் பரிசு’ – பிறந்தநாளில் நடிகர் கார்த்தி வேண்டுகோள்

இந்நிலையில் நடிகர் கார்த்தி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ரசிகர்கள் யாரும் தனது பிறந்தநாளை கொண்டாமல் வீட்டிலியே இருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து ரசிகர்களுக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில் இந்த கொரானா சூழல் இதுவரை நாம் கண்டிராத அளவுக்கு மிகக் கடுமையாக உள்ளது.

‘இதுவே நீங்கள் தரும் பரிசு’ – பிறந்தநாளில் நடிகர் கார்த்தி வேண்டுகோள்

மேலும் அரசாங்கமும் மருத்துவர்களும் நமக்கு அறிவித்துள்ள மாஸ்க் அணிதல், சனிடைசர் பயன்படுத்துதல், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல், வசிப்பிடத்தை விட்டு வெளியே செல்லாமல் இருத்தல் போன்ற பாதுகாப்பு விதிமுறைகளை தவறாமல் பின்பற்றி, தம்பிகள் ஒவ்வொருவரும் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இதுவே இந்த பிறந்த நாளுக்கு எனக்கு நீங்கள் தரும் பரிசாக இருக்கும் என்று நடிகர் கார்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்

Share this story