இந்த தங்கத்த விட்டுட்டு பிக்பாஸ் வீட்டுக்குள்ள போகமுடியாது… நடிகர் நகுல் பளீர் பதில்!

இந்த தங்கத்த விட்டுட்டு பிக்பாஸ் வீட்டுக்குள்ள போகமுடியாது… நடிகர் நகுல் பளீர் பதில்!

பிக்பாஸ் 5வது சீசனில் நடிகர் நகுல் கலந்துகொள்ள இருப்பதாக வெளியான செய்திகளுக்கு அவர் பதிலளித்துள்ளார்.

தமிழில் இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்கு சீசன்கள் நடந்து முடிந்துள்ளன. நான்கு சீசன்களும் மக்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நான்கு சீசன்களையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கினார்.

இந்த தங்கத்த விட்டுட்டு பிக்பாஸ் வீட்டுக்குள்ள போகமுடியாது… நடிகர் நகுல் பளீர் பதில்!

தற்போது கமல்ஹாசன் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருப்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே வேறொரு நடிகர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. சிம்பு பெயர் இதில் அதிகமாக அடிபட்டு வருகிறது. பிக்பாஸின் 5-வது சீசன் ஜீன் மாதம் 3வது வாரத்தில் தொடங்கும் என உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் நகுல் 5-வது சீசனில் போட்டியாளராகக் கலந்துகொள்ள இருப்பதாக பல செய்திகள் வெளியாகின. தற்போது நகுல் அதுகுறித்து பதிலளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ” பிக் பாஸ் தமிழ் 5-வது சீசனுக்கு இதுவரை யாரும் என்னை அழைக்கவில்லை. அப்படியே அழைத்தாலும் இந்த தங்கத்த (அவரது மகள் அகிரா) விட்டுட்டு போக முடியாது” என்று தெரிவித்துள்ளார். எனவே நகுல் பிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

Share this story