ஊசியே இல்லாமல் தடுப்பூசி போட்டாரா ? சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா

ஊசியே இல்லாமல் தடுப்பூசி போட்டாரா ? சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா

தடுப்பூசியே செலுத்தாமல் வெறும் போட்டோவுக்கு மட்டும் போஸ் கொடுத்தாரா நயன்தாரா என நெட்டிசன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஊசியே இல்லாமல் தடுப்பூசி போட்டாரா ? சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா

தமிழகத்தில் கொரானா என்கிற கொடிய வைரஸ் நம்மை ஆட்டி படைக்கிறது. இந்நோயால் நாள்தோறும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரானா நோயின் பாதிப்பிலிருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க தடுப்பூசி போடுவதை ஊக்குவித்து வருகிறது தமிழக அரசு.

ஊசியே இல்லாமல் தடுப்பூசி போட்டாரா ? சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா

தடுப்பூசி குறித்த பயத்தை போக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வை அரசு ஏற்படுத்தி வருகிறது. அதோடு சினிமா பிரபலங்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டு மக்களிடையே சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்னர் கூட நடிகர் ரஜினிகாந்த் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். அந்த வகையில் நேற்று நடிகை நயன்தாராவும், அவரது காதலன் விக்னேஷ் சிவனும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

ஊசியே இல்லாமல் தடுப்பூசி போட்டாரா ? சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா

இந்நிலையில் நடிகை நயன்தாரா தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலானது. தற்போது அந்த தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படம் சர்ச்சையிலும் சிக்கியுள்ளது. அந்த புகைப்படத்தில் தடுப்பூசி போடும் நர்ஸ் கை மட்டும்தான் தெரிவதாகவும், நயன்தாரா ஊசியே போடவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொதுவாக இடது கையில்தான் ஊசி செலுத்திக் கொள்வார்கள். ஆனால் நயன்தாரா வலது கையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார். இதையெல்லாம் வைத்து சந்தேகம் கிளப்பியுள்ள நெட்டிசன்கள், நயன்தாரா உண்மையில் ஊசி போட்டாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Share this story