பொன்னியின் செல்வன் படத்திலிருந்து விலகிய அமிதாப் பச்சன்!?

பொன்னியின் செல்வன் படத்திலிருந்து விலகிய அமிதாப் பச்சன்!?

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்திலிருந்து அமிதாப் பச்சன் விலகியதாகக் கூறப்படுகிறது.

கல்கியின் கைவண்ணத்தில் உருவான நாவலான பொன்னியின் செல்வனைப் பற்றி அறியாதோர் இருக்க முடியாது. அந்த நாவல் மேல்கொண்ட ஈர்ப்பால் பலர் அந்த நாவலை படமாக்க முயற்சி செய்தனர். ஆனால் இறுதியாக மணிரத்னம் தான் அதை நிறைவேற்றப் போகிறார்.

இத்திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் உருவாக்கப்படுகிறது.

பொன்னியின் செல்வன் படத்திலிருந்து விலகிய அமிதாப் பச்சன்!?

பல கோடி பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக பொன்னியின் செல்வன் படம் உருவாகி வருகிறது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். பாலிவுட்டில் இருந்து ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளார்.

பொன்னியின் செல்வன் படத்திலிருந்து விலகிய அமிதாப் பச்சன்!?

மேலும் அமிதாப் பச்சன் முக்கியக் கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடிக்கவிருந்தார். ஆனால் தற்போது படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாத காரணத்தால் அமிதாப் பச்சன் பொன்னியின் செல்வன் படத்திலிருந்து விலக்கியதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முக்கிய நடிகர்களுடன் தற்போது ஹைதராபாத்தில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.

Share this story