×

‘கர்ணன்’ படக்குழு எடுத்த அதிரடி முடிவு… காரணம் இதுதான்…

சர்ச்சைகளை தவிர்க்க ‘கர்ணன்’ படக்குழு அதிரடி முடிவை எடுத்துள்ளது. மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘கர்ணன்’. இந்த படத்திற்காக தனுஷ் கடினமான உழைத்திருக்கிறார். இந்த படம் தனுஷ்க்கு மிக முக்கியமான படமாக இருக்கும் என கூறப்படுகிறது. மாரி செல்வராஜ் இந்த படத்தை எடுக்க ரொம்பவும் மெனக்கெட்டுகிறார் என சொல்லப்படுகிறது. இப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் கௌரி கிஷன், லால், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில்
 

சர்ச்சைகளை தவிர்க்க ‘கர்ணன்’ படக்குழு அதிரடி முடிவை எடுத்துள்ளது.

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘கர்ணன்’. இந்த படத்திற்காக தனுஷ் கடினமான உழைத்திருக்கிறார். இந்த படம் தனுஷ்க்கு மிக முக்கியமான படமாக இருக்கும் என கூறப்படுகிறது. மாரி செல்வராஜ் இந்த படத்தை எடுக்க ரொம்பவும் மெனக்கெட்டுகிறார் என சொல்லப்படுகிறது. இப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் கௌரி கிஷன், லால், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ள இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது சென்சார் போர்டு. சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் இடம்பெற்றுள்ள நான்கு பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் ‘கண்டா வரச்சொல்லுங்க’ பாடலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால் இரண்டாவதாக வெளியான ‘பண்டாரத்தி புராணம்’ பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பி சர்ச்சை வெடித்தது. இதையடுத்து அது ‘மஞ்சனத்தி புராணம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று இப்படம் வரும் ஏப்ரல் 9ம் தேதி வெளியாகும்‌‌ என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ‘கர்ணன்’ திரைப்படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள டிரெய்லரை வெளியிட படக்குழு தயக்கம் காட்டி வந்ததது. ஏனென்றால் ஏற்கனவே இந்த படத்தின் பாடல் வெளியாகி சர்ச்சை கிளம்பியது. அதுபோன்று ஏதாவது நடந்துவிட கூடாது என்பதால் கவனமான டிரெய்லர் வெளியிட வேண்டாம் என படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.