×

கவுதம் மேனன் இயக்கத்தில் அடுத்தடுத்து இரண்டு படங்கள்… சூப்பர் ஸ்டாராக மாறும் சிம்பு!

சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு‘ படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்தப் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மாநாடு படத்தை அடுத்து சில்லுனு ஒரு காதல் பட இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் கவுதம் கார்த்திக்கும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை அடுத்து கவுதம் மேனன் இயக்கத்தில் ‘நதிகளிலே நீராடும் சூரியன்‘ படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.
 

சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு‘ படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்தப் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

மாநாடு படத்தை அடுத்து சில்லுனு ஒரு காதல் பட இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் கவுதம் கார்த்திக்கும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்தை அடுத்து கவுதம் மேனன் இயக்கத்தில் ‘நதிகளிலே நீராடும் சூரியன்‘ படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். கவுதம் இயக்கி வரும் கடைசி சில படங்களை ஐசரி கணேஷ் தான் தயாரித்து வருகிறார். எனவே நதிகளிலே நீராடும் சூரியன் படத்தை அடுத்து மீண்டும் ஒரு படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்க கவுதம் மேனன்- சிம்பு கூட்டணி அந்தப் படத்தில் இணைந்து பணியாற்ற இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதை விட சிறப்பு என்னவென்றால், இந்தக் கூட்டணி மீண்டும் இணையும் படத்திற்கு ‘சூப்பர் ஸ்டார்‘ என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தத் தலைப்பு வைத்து தான் படத்தின் கதை எழுதப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் என்பதால் படத்தின் மீதான இன்னும் அதிகரிக்கச் செய்கிறது என்றே தான் கூற வேண்டும். ஏற்கனவே சிம்பு லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டு வருகிறார். இந்தப் படத்தின் மூலம் மெயின் சூப்பர் ஸ்டார் ஆகப் போகிறார் போல!