‘மாநாடு’ படம் சிம்புவுக்கு திருமுனையாக அமையப் போகிறது… தயாரிப்பாளர் உறுதி!

‘மாநாடு’ படம் சிம்புவுக்கு திருமுனையாக அமையப் போகிறது… தயாரிப்பாளர் உறுதி!

மாநாடு திரைப்படம் சிம்புவுக்கும் வெங்கட் பிரபுவுக்கும் ஒரு மைல் கல்லாக அமையும் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படம் உருவாகி வருகிறது. சமீபத்தில் தான் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. ஈஸ்வரன் படத்தைப் போலவே மாநாடு படத்திலும் நேரம் தவறாமல் கலந்துகொண்டு விரைவில் படத்தை முடித்துக் கொடுத்துள்ளார். இந்தப் படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன் கதாநாயகியாக நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

‘மாநாடு’ படம் சிம்புவுக்கு திருமுனையாக அமையப் போகிறது… தயாரிப்பாளர் உறுதி!

மாநாடு படத்தின் போஸ்டர், டீசர், படப்பிடிப்பு புகைப்படங்கள் என படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளனர். தற்போது இந்தப் படம் சிம்பு மற்றும் வெங்கட் பிரபுவுக்கு திருப்புமுனையாக அமையும் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

‘மாநாடு’ படம் சிம்புவுக்கு திருமுனையாக அமையப் போகிறது… தயாரிப்பாளர் உறுதி!

“நான் பார்த்தவரைக்கும் மாநாடு படம் சிலம்பரசனுக்கும் வெங்கட் பிரபுவுக்கும் ஒரு மைல்கல்லாக அமையும். இருவருக்கும், உடன் பணிபுரிந்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

Share this story