×

வசந்தபாலன் எனக்கு அழகான கதாபாத்திரம் கொடுத்துள்ளார்… மனம் திறந்த சுரேஷ் சக்ரவர்த்தி!

சுரேஷ் சக்ரவர்த்தி இயக்குனர் வசந்தபாலன் படத்தில் நடிப்பது பற்றி மனம் திறந்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர், டைரக்டர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் சுரேஷ் சக்ரவர்த்தி. பாலசந்தர் இயக்கிய ‘அழகன்’ படத்தின் மூலம் சுரேஷ் சினிமாவில் அறிமுகமானார். சுரேஷ் சக்ரவர்த்தி சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் நான்காவது சீசனில் கலந்துகொண்டார். நன்றாக விளையாடி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். ரசிகர்களால் சுரேஷ் தாத்தா என்று அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார். தற்போது சுரேஷ் சக்ரவர்த்தி இயக்குனர் வசந்தபாலன்
 

சுரேஷ் சக்ரவர்த்தி இயக்குனர் வசந்தபாலன் படத்தில் நடிப்பது பற்றி மனம் திறந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகர், டைரக்டர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் சுரேஷ் சக்ரவர்த்தி. பாலசந்தர் இயக்கிய ‘அழகன்’ படத்தின் மூலம் சுரேஷ் சினிமாவில் அறிமுகமானார். சுரேஷ் சக்ரவர்த்தி சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் நான்காவது சீசனில் கலந்துகொண்டார். நன்றாக விளையாடி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். ரசிகர்களால் சுரேஷ் தாத்தா என்று அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார்.

தற்போது சுரேஷ் சக்ரவர்த்தி இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் இணைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். சுரேஷ் இந்தப் படத்தின் மூலம் நீண்ட வருடங்களுக்குப் பிறகு சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அவர் வசந்தபாலன் படத்தில் இரண்டு நாட்கள் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. வசந்தபாலன் படத்தில் நடிப்பது குறித்து சுரேஷ் தனது அனுபவங்களைத் தெரிவித்துள்ளார்.

“வாழ்க்கையில் நம்மை ஆச்சரியப்படுத்தும் சில விஷயங்கள் உள்ளன. எனக்கு அப்படிப்பட்ட ஒரு தருணம் இது. நான் எப்போதும் வசந்தபாலனின் படைப்புகளை நேசிக்கிறேன். நான் பிக்பாஸ் ஷோவில் இருந்து வெளியே வந்ததும், அவரது நிர்வாக தயாரிப்பாளரிடமிருந்து படம் குறித்து எனக்கு அழைப்பு வந்தது. அந்தப் படத்தில் இணைந்தது எனக்கு ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. வசந்தபாலன் ஸ்டார்ட் ம்யூசிக் ஷோவில் என்னைப் பற்றி பேசினார்.

படம் தொடர்பான எந்த விவரங்களையும் என்னால் வெளியிட முடியவில்லை என்றாலும், அவர் எனக்கு ஒரு அழகான கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார் என்று சொல்ல முடியும்.

நடிப்பு என்று வரும்போது, ​​நமக்கு எல்லாம் தெரியும் என்று தெரியும் என்று நாம் எவ்வளவு நினைத்தாலும், அது எப்போதும் கற்றுக் கொண்டே இருக்கவேண்டிய ஒன்று. ஆனால் இளைஞர்களின் வேகத்திற்கு பணியாற்றுவதில் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. வேகமாய் இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று சுரேஷ் தெரிவித்துள்ளார். மேலும் மூன்று படங்களில் நடிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.