சென்னைக்குத் திரும்பும் அண்ணாத்த!

சென்னைக்குத் திரும்பும் அண்ணாத்த!

அண்ணாத்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் வைத்து நடைபெற இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணாத்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்றது. பின்னர் கொரோனா நோய் பரவல் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் ரஜினி படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்றார். அப்போது படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் படப்பிடிப்பு உடனே நிறுத்தப்பட்டது.

சென்னைக்குத் திரும்பும் அண்ணாத்த!

இதற்கிடையில் ரஜினி அரசியல் முடிவு குறித்த பரபரப்பு நிலவி வந்தது. பின்னர் உடல்நலத்தை முன்னிட்டு ரஜினி தான் அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்தார்.

சென்னைக்குத் திரும்பும் அண்ணாத்த!

தற்போது மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பு அதிக பாதுகாப்புடன் நடைபெற உள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் மார்ச் 15-ம் தேதி முதல் துவங்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பையோபப்பிள் என்று அழைக்கப்படும் முறையைப் பயன்படுத்தி உச்ச கட்ட பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

அண்ணாத்த திரைப்படம் இந்தாண்டு நவம்பர் 4-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது.

.

Share this story