தீபிகா படுகோன், ஷ்ரத்தா கபூர், சாரா அலி கான் மொபைல் போன்களை கைப்பற்றிய என்சிபி!

தீபிகா படுகோன், ஷ்ரத்தா கபூர், சாரா அலி கான் மொபைல் போன்களை கைப்பற்றிய என்சிபி!

போதைப்பொருள் வழக்கில் சம்மன் அனுப்பப்பட்ட நடிகைகள் தீபிகா படுகோன், ஷ்ரத்தா கபூர் மற்றும் சாரா அலி கான் ஆகியோரின் மொபைல் போன்கள், போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தால் கைப்பற்றப்பட்டுள்ளது.

தீபிகா படுகோன், ஷ்ரத்தா கபூர், சாரா அலி கான் மொபைல் போன்களை கைப்பற்றிய என்சிபி!
Deepika padukone at NCB

கரிஷ்மா பிரகாஷ், ரகுல் ப்ரீத் சிங், மேலாளர் ஜெயா சஹா மற்றும் காஸ்டியூம் டிசைனர் சிமோன் கம்பட்டா ஆகியோரின் தொலைபேசிகளையும் என்சிபி கைப்பற்றியுள்ளது.

நேற்று நடந்த விசாரணையில் நடிகைகள் தீபிகா படுகோனே, ஷ்ரத்தா கபூர் சாரா அலிகான் மற்றும் மேலாளர் கரிஷ்மா பிரகாஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு அறிக்கைகளை என்சிபி பதிவு செய்தது.

Shraddha Kapoor at NCB office

சுஷாந்த் மரணம் தொடர்பான போதைப்பொருள் வழக்கில் இதுவரை 18 க்கும் மேற்பட்டோர் என்.சி.பி.யால் கைது செய்யப்பட்டுள்ளதாக என்.சி.பியின் தென்மேற்கு பிராந்திய துணை டி.ஜி. முதா அசோக் ஜெயின் நேற்று தெரிவித்துள்ளார். சாரா அலி கான், தீபிகா படுகோனே மற்றும் ஷ்ரத்தா கபூர் ஆகியோரின் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Sara Ali Khan
Sara Ali Khan at NCB

“கரிஷ்மா பிரகாஷ், சாரா அலி கான், தீபிகா படுகோனே மற்றும் ஷ்ரத்தா கபூர் ஆகியோரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விசாரணைக்கு பின்னர் கிஷிடிஜ் பிரசாத் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று புதிய சம்மன் எதுவும் வெளியிடப்படவில்லை. 18 க்கும் மேற்பட்டவர்களை நாங்கள் கைது செய்துள்ளோம்” என்று ஜெயின் கூறியுள்ளார்.

Share this story