“உன் மகள் அழுகிறாள் ணா”… மாறன் மறைவு குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் உருக்கம்!

“உன் மகள் அழுகிறாள் ணா”… மாறன் மறைவு குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் உருக்கம்!

நடிகர் மாறன் மறைவு குறித்து இயக்குனர் பா ரஞ்சித் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கில்லி, குருவி, டிஷ்யூம், பட்டாசு, தலைநகரம், வேட்டைக்காரன், கேஜிஎஃப் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள மாறன் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

இவரது மறைவு திரைதுரையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறை பிரபலங்கள் பலரும் மாறனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

“உன் மகள் அழுகிறாள் ணா”… மாறன் மறைவு குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் உருக்கம்!

மாறன் கடைசியாக பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் மாஞ்சா கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எனவே பா ரஞ்சித் மாறனின் மறைவு குறித்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில் “கடக்க முடியாத துயரம்..எப்போதும் கட்டுகடங்காத அன்பை பொழியும் மாறன் அண்ணாவே, உன் முகத்தை கூட காட்டவில்லை என்று உன் மகள் அழுகிறாள் ணா!! என்னிடம் தேற்றுவதற்கு வார்த்தைகள் இல்லை!! நண்பர்களே பாதுகாப்பாக இருங்கள் !!” என்று தெரிவித்துள்ளார்.

Share this story