கிரேனில் தொங்கி சிம்புவுக்கு பாலாபிஷேகம் செய்த ரசிகர்!
நடிகர் சிம்புவின் வெறித்தனமான ரசிகர் ஒருவர், சிம்புவின் கட்-அவுட்டிற்கு மிகவும் ஆபத்தான முறையில் பாலாபிஷேகம் செய்தது பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
சென்னை: நடிகர் சிம்புவின் வெறித்தனமான ரசிகர் ஒருவர், சிம்புவின் கட்-அவுட்டிற்கு மிகவும் ஆபத்தான முறையில் பாலாபிஷேகம் செய்தது பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
தமிழ் திரையுலகில் வரிசையாக ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களை தக்க வைத்துக் கொள்ளும் ஹீரோக்களுக்கு இடையே, சிம்புவுக்கு இருக்கும் ரசிகர்கள் அவரை ஒருபோதும் கைவிட்டதில்லை. வரிசையாக படுதோல்வி படங்களை கொடுத்தும், ஏகப்பட்ட விமர்சனங்களுக்கு ஆளாகிய பின்னரும் சிம்பு மீதான அவரது ரசிகர்களின் பாசம் கொஞ்சமும் குறையவில்லை எனலாம்.
தோல்வி படங்களால் ரசிகர்களை ஏமாற்றி வந்த சிம்பு, சிறிய இடைவெளிக்குப் பிறகு தனது அடுத்த இன்னிங்க்ஸை தொடங்கியுள்ளார். சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடித்த ‘செக்கச் சிவந்த வானம்’ திரைப்படம் ரிலீசானது. மல்டிஸ்டாரர் படமான ‘செக்கச் சிவந்த வானம்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தை அடுத்து சிம்புவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வெறித்தனமான
#Simbu fan , ??#Silambarasan sir
Proud of u sir ?? pic.twitter.com/7UXQCUFEkr— #Difficult_anandh (@Anand65665152) September 28, 2018
இப்படம் ரிலீசான அன்று, தீவிர ரசிகர் ஒருவர் சிம்புவின் பெரிய கட்-அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்ய ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்து அதில் தொங்கியபடி பாலாபிஷேகம் செய்துள்ளார். சிம்புவுக்காக தன்னைத்தானே வறுத்திக் கொண்டு வெறித்தனமாக செயல்பட்ட ரசிகரை பார்த்து பலரும் ஆச்சர்யத்தில் வியந்தனர்.