பிக் பாஸ் 2 பைனல்ஸ்: வெற்றி பெறப்போவது நேர் வழியா? குறுக்கு வழியா?
பிக் பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே இன்று ஆரம்பமாகிறது.
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே இன்று ஆரம்பமாகிறது.
விஜய் டிவியில் கடந்த 100 நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே இன்று முதல் ஆரம்பமாகிறது. உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியின் பைனல்ஸில் ரித்விகா, ஐஸ்வர்யா, ஜனனி, விஜயலக்ஷ்மி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த சீசனின் டைட்டில் வின்னரை கமல்ஹாசன் நாளை அறிவிக்கவுள்ளார்.
இந்நிலையில், கிராண்ட் ஃபினாலேவின் முதல் புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில், ‘எதிர்பார்த்ததைவிட அமோக வாக்குப்பதிவி. அனைவருக்கும் நன்றி. நேர் வழியில் வெற்றியை அடைவது ஒரு வழி, குறுக்கு வழியில் வெற்றியை கவர்வது ஒரு வழி. வெற்றிப்பெறப்போவது நேர் வழியா, குறுக்கு வழியா? என கமல்ஹாசன் கேவி எழுப்புகிறார்.
வெற்றி பெறப்போவது நேர் வழியா?! குறுக்கு வழியா?! ?? #பிக்பாஸ் #GrandFinale – இன்று இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/lZf2QPJrtY
— Vijay Television (@vijaytelevision) September 29, 2018
ஆக நேர் வழியில் ரித்விகாவும், குறுக்கு வழியில் ஐஸ்வர்யாவும் வெற்றிக்கு போராடிக் கொண்டிருப்பதை மக்களை போல் கமல்ஹாசனும் உணர்வதை இந்த புரொமோ வீடியோ காட்டுவதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.