முடிவுக்கு வந்தது நயன்தாராவின் மலையாள படத்தின் படப்பிடிப்பு!

முடிவுக்கு வந்தது நயன்தாராவின் மலையாள படத்தின் படப்பிடிப்பு!

நடிகை நயன்தாரா நடிப்பில் மலையாளத்தில் உருவாகிவந்த திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது.

சென்னை: நடிகை நயன்தாரா நடிப்பில் மலையாளத்தில் உருவாகிவந்த திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது.

Mr.லோக்கல் படத்தை தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘கொலையுதிர் காலம்’ திரைப்படம் வரும் ஜூன்.14ம் தேதி ரிலீசாகவுள்ளது. அதுமட்டுமின்றி ‘தளபதி 63’, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்பார்’ படத்தில் நடித்துள்ளார். 

முடிவுக்கு வந்தது நயன்தாராவின் மலையாள படத்தின் படப்பிடிப்பு!

அதுமட்டுமின்றி மலையாளத்தில் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் நிவின்பாலிக்கு ஜோடியாக நடித்துள்ளார். ‘லவ் ஆக்சன் டிராமா’ என்று பெயரிட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் தயான் ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ளார். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவதும் நிறைவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

இதனையடுத்து அதை படக்குழுவினர் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. 

Share this story