‘அண்ணாத்த’ படப்பிடிப்பிற்காக தனி விமானத்தில் பறந்த ரஜினி… புதிய அப்டேட் வெளியானது…

‘அண்ணாத்த’ படப்பிடிப்பிற்காக தனி விமானத்தில் பறந்த ரஜினி… புதிய அப்டேட் வெளியானது…

‘அண்ணாத்த’ படத்தின் ஷூட்டிங்கில் கலந்துக்கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத் புறப்பட்டு சென்றார்.

நடிகர் ரஜினி – சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படம் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. இதற்கான ஷூட்டிங்கின் பணிகளை வேகப்படுத்தி விரைவாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. டி.இமான் இந்த படத்தின் பாடல்களை உருவாக்கி வருகிறார். ரஜினியுடன் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

நவம்பர் 4ம் தேதி இந்த படம் வெளியிடப்படும் என்று சன் பிக்சர்ஸ் ஏற்கனவே அறிவித்துள்ளது. ஏற்கனவே பாதியில் நிறுத்தப்பட்ட இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் முதல் விரைவாக நடைபெற்று வருகிறது. இந்த ஷூட்டிங் சென்னை அடுத்த பூந்தமல்லியில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் நடைபெற்று வந்ததது. இதில் ரஜினி, நயன்தாரா இணைந்து நடிக்கும் பாடல் காட்சியும், ஒரு சண்டைக்காட்சியும் படமாக்கப்பட்டது. மீதமுள்ள ஷூட்டிங்கை இந்த மாத இறுதிக்குள் முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் ‘அண்ணாத்த’ படத்தின் ஷூட்டிங்கில் கலந்துக்கொள்ள நடிகர் ரஜினிகாந்த் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் ஐதராபாத் புறப்பட்டு சென்றார். அங்கு ராமோஜி பிலிம் சிட்டியில் நடக்கும் ஷூட்டிங்கில் இன்று கலந்துக்கொள்கிறார். அதற்கான ஏற்பாடுகளை படக்குழு முன்னரே செய்து விடுத்துள்ளது. விரைவில் இந்த படத்தின் அப்டேட்டை எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.

Share this story