விவாகரத்து கேட்ட மனைவியைச் சேர்த்து வைத்த கொரோனா… ரஜினி பட வில்லனுக்கு நடந்த ருசிகர சம்பவம்!

விவாகரத்து கேட்ட மனைவியைச் சேர்த்து வைத்த கொரோனா… ரஜினி பட வில்லனுக்கு நடந்த ருசிகர சம்பவம்!

கொரோனா காரணமாக பிரிந்திருந்த தன் மனைவியுடன் சேர்ந்துள்ளார் பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக்

பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் நவாசுதீன் சித்திக். இவர் ரஜினியின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்திருந்தார். தற்போது நவாசுதீன் பாலிவுட்டில் பிரபலமான நடிகர்.

நவாசுதீன் சித்திக் 10 வருடங்களுக்கு முன்பு ஆலியா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

விவாகரத்து கேட்ட மனைவியைச் சேர்த்து வைத்த கொரோனா… ரஜினி பட வில்லனுக்கு நடந்த ருசிகர சம்பவம்!

இதையடுத்து கடந்த வருடன் நவாசுதீனின் மனைவி ஆலியா சித்திக் இருவருக்குள் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியது பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தற்போது நவாசுதீன் சித்திக்கும், ஆலியாவும் விவாகரத்து முடிவை கைவிட்டு மீண்டும் இணைந்துள்ளனர்.

“சில வாரங்களுக்கு முன்பு எனக்கு நான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டேன். அதனால் என்னால் குழந்தைகளுடன் இருக்க முடியவில்லை. அப்போது நவாசுதீன் தான் குழந்தைகளை பார்த்துக்கொண்டார். என்னையும் நன்றாக கவனித்துக்கொண்டார். நல்ல தந்தையாகவும், கணவனாகவும் அவர் இருந்தார். தற்போது என்னிடம் அன்பாக இருக்கிறார். அப்போது அவரது இன்னொரு பக்கத்தை பார்த்தேன். நடந்ததை மறந்து குழந்தைகளுக்காக இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளோம்” என்று ஆலியா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், நாங்கள் மிகவும் துன்பங்களைச் சந்தித்தோம். கொரோனா உங்களை சிறப்பாக மாற்ற முடியாவிட்டால், வேறு எதுவாலும் மாற்ற முடியாது. நான் அவர்களுக்காக எப்போதும் இருப்பேன். நாம் ஒவ்வொருவரும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.” என்று நவாசுதீன் தெரிவித்துள்ளார்.

Share this story