வருமான வரிச் சோதனையின் போது அனுராக் எடுத்த புகைப்படம்… இணையத்தில் வைரல்!

வருமான வரிச் சோதனையின் போது அனுராக் எடுத்த புகைப்படம்… இணையத்தில் வைரல்!

வருமான வரிச்சோதனையை அடுத்து இயக்குனர் அனுராக் காஷ்யப் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாலிவுட்டில் இயக்குனர் அனுராக் காஷ்யப் மிகப் பிரபலமானவர். இவரது படங்களின் கதைகள் எப்போதும் விமர்சன ரீதியாக பாராட்டப்படுபவை. தமிழுக்கு இயக்குனர் பாலா போல இந்திக்கு அனுராக் காஷ்யப் என்று சொன்னால் இன்னும் நன்றாக தொடர்புபடுத்திக் கொள்ளமுடியும்.

வருமான வரிச் சோதனையின் போது அனுராக் எடுத்த புகைப்படம்… இணையத்தில் வைரல்!

இவரது படங்கள் மட்டுமல்ல இவர் அவ்வப்போது கூறும் கருத்துக்களும் சாட்டையடி பதிவுகளாக அமையும். இதனாலேயே இவர் பல பிரச்சனைகளுக்கு உள்ளாவதுண்டு. தற்போது விஸ்வரூபம் எடுத்து வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு அனுராக் காஷ்யப் மற்றும் நடிகை டாப்ஸி இருவரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

வருமான வரிச் சோதனையின் போது அனுராக் எடுத்த புகைப்படம்… இணையத்தில் வைரல்!

இந்நிலையில், வரி ஏய்ப்பு தொடர்பாக அனுராக் காஷ்யப் மற்றும் டாப்ஸி பன்னு ஆகியோருக்கு தொடர்புடைய சொத்துக்களை வருமான வரி அதிகாரிகள் சோதனை செய்தனர். இது மிகப்பெரிய பேசுபொருளாக மாறியது.

சோதனையின் போது அனுராக் காஷ்யப் தனது டிவிக்கள், புத்தகங்கள் உள்ள அறையிலிருந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share this story