‘அண்ணாத்த’ படத்திற்கு சிக்கல்… இறுதிக்கட்ட ஷூட்டிங் நடைபெறுமா ?

‘அண்ணாத்த’ படத்திற்கு சிக்கல்… இறுதிக்கட்ட ஷூட்டிங் நடைபெறுமா ?

இறுதிக்கட்ட ஷூட்டிங்கை படமாக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் ‘அண்ணாத்த’ படக்குழு தவித்து வருகிறது.

‘அண்ணாத்த’ படத்திற்கு சிக்கல்… இறுதிக்கட்ட ஷூட்டிங் நடைபெறுமா ?

நடிகர் ரஜினியின் அடுத்த பிரம்மாண்ட திரைப்படமாக  ‘அண்ணாத்த’ உருவாகி வருகிறது.இந்த படத்தை இயக்கும் சிறுத்தை சிவா இறுதிக்கட்ட பணிகளை முடிக்க தீீவிரமா ஈடுபட்டு வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். வரும் 4ம் தேதி தீபாவளியையொட்டி இந்த படம் ரிலீசாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

‘அண்ணாத்த’ படத்திற்கு சிக்கல்… இறுதிக்கட்ட ஷூட்டிங் நடைபெறுமா ?

கொரானா தொற்று குறைந்ததை அடுத்து இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்று வந்ததது. இதையடுத்து தேர்தலுக்கு பிறகு அடுத்தக்கட்ட ஷூட்டிங் ஐதராபாத்தில் தொடங்கியது. ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெறும் இந்த ஷூட்டிங்கில் ரஜினி நடிக்கவேண்டிய முக்கிய காட்சிகளை படமாக்கினார் இயக்குனர் சிவா. இன்னும் சில வாரங்களில் இறுதிக்கட்ட ஷூட்டிங் மொத்தமாக முடிந்துவிடும் என கூறப்படுகிறது. 

‘அண்ணாத்த’ படத்திற்கு சிக்கல்… இறுதிக்கட்ட ஷூட்டிங் நடைபெறுமா ?

இந்நிலையில் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள இந்த ஷூட்டிங்கில், ‘அண்ணாத்த’ படத்தின் சில காட்சிகளை இரவு நேரத்தில் எடுக்கப்பட உள்ளனர் படக்குழுவினர். ஆனால் கொரானா காரணமாக ஐதராபாத்தில் கடுமையான ஊரங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஷூட்டிங்கை எப்படி நடத்துவது என்று தெரியாமல் படக்குழுவினர் தவித்து வருகின்றனர். இதையடுத்து இரவு நேரத்தில் காட்சிகளை படமாக்க தெலுங்கானா அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி கிடைத்துவிட்டால் இறுதிக்கட்ட ஷூட்டிங் முடிந்துவிடும் என தெரிகிறது.

Share this story