டோலிவுட்டை அடுத்து பாலிவுட் பக்கம் திரும்பும் ஷங்கர்!?

டோலிவுட்டை அடுத்து பாலிவுட் பக்கம் திரும்பும் ஷங்கர்!?

இயக்குனர் ஷங்கர் ரன்வீர் சிங் நடிப்பில் பாலிவுட்டில் ஒரு படத்தை இயக்கவிருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இயக்குனர் ஷங்கர் சமீபத்தில் தான் தெலுங்கு நடிகர் ராம் சரண் உடன் இணைந்து பணியாற்ற இருப்பதாக அறிவித்திருந்தார். ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியது. அப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தவறியது.

டோலிவுட்டை அடுத்து பாலிவுட் பக்கம் திரும்பும் ஷங்கர்!?

அதையடுத்து கமல்ஹாசன் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தை இயக்கத் திட்டமிட்டார். அந்தப் படமும் பாதியில் நிற்கிறது. அதையடுத்து தற்போது தெலுங்கு திரையுலத்திற்கு தாவி ராம் சரண் நடிப்பில் ஒரு படத்தை இயக்கவிருப்பதாக அறிவித்துள்ளார்.

தற்போது ஷங்கர் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. ஷங்கர் கடைசியாக 2001-ம் ஆண்டு ‘முதல்வன்’ படத்தின் இந்தி ரீமேக்கான ‘நாயக்’ படத்தை பாலிவுட்டில் இயக்கினார். அதையடுத்து தற்போது வரை பாலிவுட்டில் எந்தப் படத்தையும் அவர் இயக்கவில்லை.

டோலிவுட்டை அடுத்து பாலிவுட் பக்கம் திரும்பும் ஷங்கர்!?

ரன்வீரின் குழு சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஷங்கரை அணுகியதாகவும், இணைந்து படம் செய்ய கோரிக்கை வைத்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது ராம் சரண் படத்தைத் துவங்குவதற்கு முன்பே இப்படத்தை துவங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Share this story