“தாய்க்கு முதல் மரியாதை” – கலைமாமணி விருதை சமர்பித்து ஆசி பெற்ற சிவகார்த்திகேயன் !

“தாய்க்கு முதல் மரியாதை” – கலைமாமணி விருதை சமர்பித்து ஆசி பெற்ற சிவகார்த்திகேயன் !

கலைமாமணி விருது வாங்கிய சிவகார்த்திகேயன் தனது தாயிடம் ஆசி பெற்ற நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“தாய்க்கு முதல் மரியாதை” – கலைமாமணி விருதை சமர்பித்து ஆசி பெற்ற சிவகார்த்திகேயன் !

ஒரு சாதாரண நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியைத் தொடங்கிய சிவகார்த்திகேயன், படிப்படியாக உயர்ந்து இந்த நிலையை எட்டியுள்ளார். வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்த அவருக்கு, தமிழக அரசு கலைமாமணி விருதை வழங்கி கவுரவித்துள்ளது.

“தாய்க்கு முதல் மரியாதை” – கலைமாமணி விருதை சமர்பித்து ஆசி பெற்ற சிவகார்த்திகேயன் !

இந்த விருதை பெற்றுக்கொண்ட சிவகார்த்திகேயன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்த விருது கிடைக்க உறுதுணையாக இருந்த தமிழக மக்களுக்கும், அப்பா, அம்மாவுக்கும் நன்றி என‌ கூறினார். இதையடுத்து வீட்டிற்கு சென்ற சிவகார்த்திகேயன், தனது தாய் காலில் விழுந்து கலைமாமணி விருதை சமர்பித்து ஆசிபெற்றார். இதனால் நெகிழ்ந்துபோனார் சிவகார்த்திகேயன் தாய்‌.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள சிவகார்த்திகேயன், சாமானியனையும் சாதனையாளனாய் மாற்றும் தமிழக மக்களுக்கும்,இந்த விருதளித்து ஊக்கப்படுத்திய தமிழக அரசிற்கும் மிக்க நன்றி. தந்தையை இழந்து நிற்கதியாய் நின்ற எங்களை இழுத்து பிடித்து கரைசேர்த்த என் தாய்க்கு இந்த கலைமாமணி சமர்ப்பணம் என்று உருக்கமாக கூறியுள்ளார். இந்தப் பதிவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Share this story