பிரபல தயாரிப்பாளருக்கு திடீர் மாரடைப்பு. தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

பிரபல தயாரிப்பாளருக்கு திடீர் மாரடைப்பு. தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

பிரபல தயாரிப்பாளர் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் சமீபகாலமாக என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக இறந்து வருகின்றனர். நகைச்சுவை நடிகர் விவேக் போன்ற ஜாம்பான்கள் இழப்பையே நம்மால் தாங்கிக்கொள்ள முடியாத நிலையில் இந்த கொரானா வேறு நம்மை பாடாய் படுத்துகிறது. சமீபத்தில் கொரானாவால் இயக்குனர் கே.வி.ஆனந்த், குணசித்திர நடிகர் ஜோக்கர் துளசி உள்ளிட்டோர் பலியாகியுள்ளனர்.

இதேபோன்று இன்று கூட பிரபல குணசித்திர நடிகர் நெல்லை சிவா மரணமடைந்துள்ளார். திரையுலகில் இப்படி தயாரிப்பாளர், இயக்குனர்கள், நடிகர்கள் என பலரும் மரணமடைந்து வருவது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி வருகிறது.

பிரபல தயாரிப்பாளருக்கு திடீர் மாரடைப்பு. தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

இந்நிலையில் மெர்சல் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை தயாரித்த தேனாண்டாள் பிலிம்ஸ் முரளிக்கு இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முரளிக்கு லேசான மாரடைப்புதான் என்றும், விரைவில் நலம்பெற்று வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share this story