பேமிலி மேன் வெப் சீரிஸ் குறித்த சர்ச்சை… சமந்தா மௌனம் காக்க இதுதான் காரணமாம்!

பேமிலி மேன் வெப் சீரிஸ் குறித்த சர்ச்சை… சமந்தா மௌனம் காக்க இதுதான் காரணமாம்!

மனோஜ் பாஜ்பாயி மற்றும் சமந்தா முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்து, ராஜ் மற்றும் டீகே இயக்கத்தில் உருவாகியுள்ள தி பேமிலி மேன் இரண்டாம் பாகத்தின் ட்ரைலர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகியது.

பேமிலி மேன் வெப் சீரிஸ் குறித்த சர்ச்சை… சமந்தா மௌனம் காக்க இதுதான் காரணமாம்!

ட்ரைலரில் சமந்தா இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண்ணாகக் காண்பிக்கப்பட்டிருந்தார். இந்த சீரிஸில் தமிழர்களைத் தீவிவாதிகளாக சித்தரித்துள்ளதாகப் பல புகார்கள் எழுந்தன. எனவே இந்த வெப் சீரிஸை முழுவதுமாகத் தடை செய்ய வேண்டும் என்றும் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

பேமிலி மேன் வெப் சீரிஸ் குறித்த சர்ச்சை… சமந்தா மௌனம் காக்க இதுதான் காரணமாம்!

அதையடுத்து அந்த வெப் சீரிஸின் இயக்குனர்களான ராஜ் மற்றும் டீகே தங்களுக்கு தமிழர்கள் மீது மிகுந்த மரியாதை இருப்பதாகவும், தமிழர்களைத் தவறாக சித்தரிக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.

பேமிலி மேன் வெப் சீரிஸ் குறித்த சர்ச்சை… சமந்தா மௌனம் காக்க இதுதான் காரணமாம்!

இந்த விவகாரம் குறித்து சமந்தா இதுவரை வாய் திறக்காமல் மௌனம் காத்து வருகின்றனர். அனைவரும் சமந்தாவின் கருத்துக்கு ஆவலாகக் காத்திருக்கின்றனர். ஆனால் சமந்தா தற்போது இதுபற்றி பேசினால் அது மேலும் சர்ச்சையைத் தான் ஏற்படுத்தும், எனவே மௌனம் காக்குமாறு இயக்குனர்கள் சமந்தாவிடம் கோரிக்கை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே தான் சமந்தா இதுவரை இந்த விவகாரம் குறித்து பேசாமல் இருக்கிறாராம். வெப் சீரிஸ் வெளியான பிறகு தான் அதில் எவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்பது தெரிய வரும்.

Share this story