நன்றி நெய்வேலி! புது செல்பியுடன் விஜய் பதிவிட்ட புதிய ட்வீட்!!
மாஸ்டர் படப்பிடிப்பில் ஈடுபட்டிருக்கும் நடிகர் விஜய் தனது ரசிகர்களை சந்தித்து செல்பி எடுத்து மகிழ்ந்தார்.
பிகில் படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். விஜயின் 64-வது படமான இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு டெல்லி மற்றும் சென்னையில் நடைபெற்ற நிலையில் தற்போது நெய்வேலியில் நடைபெற்றுவருகிறது. விரைவில் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்க இருக்கின்றன. வரும் ஏப்ரல் மாதத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மாஸ்டர் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்புக்கு நடுவே விஜயை சந்தித்த வருமான வரித்துறையினர் பிகில் பட வரிஏய்ப்பு தொடர்பாக விசாரணை நடத்தினர். இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதுடன், ரசிகர்களும் படப்பிடிப்பு நடைபெற்ற இடத்திற்கு கூடினர்.
Thank you Neyveli pic.twitter.com/cXQC8iPukl
— Vijay (@actorvijay) February 10, 2020
இதையடுத்து நேற்று முன் தினம் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு ரசிகர்களை சந்தித்த விஜய், கூட்டத்திற்கு மத்தியில் வேனின் மேல் ஏறி நின்றபடி செல்பி எடுத்தார். இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
@actorvijay Middle of the Fans Crowd.
Massive response to #Thalapathy Shooting Spot . #TTNCinema #TopTamilNews #TTN pic.twitter.com/qsIa5HU3MR— TTN Cinema (@ttncinema) February 9, 2020
இந்நிலையில் தற்போது படப்பிடிப்புக்கு நடுவே ரசிகர்களுக்கு மத்தியில் எடுத்த புகைப்படத்தை நடிகர் விஜய் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் நன்றி நெய்வேலி என்றும் பதிவிட்டுள்ளார்.